4வது காலாண்டில் அதிக ஆட்களை வேலைக்கு எடுக்க திட்டமிடும் இந்திய நிறுவனங்கள்
டெல்லி: இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி காத்திருக்கிறது.
வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்காததால் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதை வெகுவாக குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் சிலரை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மேன்பவர்குரூப் என்ற நிறுவனம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள 5,059 நிறுவனங்கள் மற்றும் 42 நாடுகளைச் சேர்ந்த 65,000 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

நல்ல செய்தி
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான 4வது காலாண்டில் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கப்போவதாக கணக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்திய நிறுவனங்களில் 41 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் புதிதாக இவ்வளவு ஆட்களை பணியமர்த்த நிறுவனங்கள் திட்டமிடவில்லை.

தைவான்
இந்தியாவை அடுத்து தைவானில் உள்ள நிறுவனங்களில் 31 சதவீத நிறுவனங்கள் புதிதாக ஆட்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தாலியில் உள்ள நிறுவனங்களுக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை.

எந்தெந்த துறைகள்
தொழில்நுட்பம்(ஐடி), மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம், இ-காமர்ஸ், சுரங்கம், கட்டுமானம், நிதி, இன்சுரன்ஸ், ரியல் எஸ்டேட் துறைகளில் புதிதாக ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படவிருக்கிறார்கள்.

மெதுவாகத் தான்
ஹெட்ஹன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கிரிஷ் லக்ஷ்மிகாந்த் கூறுகையில், வேலை சந்தை பெரும் அடிவாங்கியுள்ளது. அதனால் அது மெல்ல மெல்ல தான் மீண்டு வரும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் மீண்டு வருகிறது. அதனால் ஐடி மற்றும் ஏற்றுமதி வியாபாரம் நிச்சயம் மேம்படும் என்றார்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications