Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில் வேலை கோடி புண்ணியம்.. எழுதப் படிக்க தெரிந்தால் போதும்! ரூ.40,000 வரை சம்பளம்! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட மொத்த 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தமிழில் படிக்க எழுத தெரிந்தவர்களும் கூட இந்த பணியிடங்களுய்க்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பின் படி, சரக்கரை காப்பாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இரவு காவலர் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தோட்ட பராமரிப்பாளர் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. இதற்கான சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை. தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பது போதுமானது.

HR amp amp CE Temple Jobs in Chennai

கால்நடை பராமரிப்பாளர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. சம்பளம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை. தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஓதுவார் பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருப்பதுடன், தேவாரப்பள்ளி வழங்கும் 3 ஆண்டு பாடப்பிரிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சுயம்பாகி பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. மாத சம்பளம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை. கோயில் வழக்கப்படி நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்கு முறைகள் குறித்த அறிவும் அவசியம்.

ஸ்ரீபாதம் தாங்கி பதவிக்கு 1 காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழில் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டு முன் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைவாய்ப்புக்கு எந்தவிதமான விண்ணப்ப கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 12.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026 (மாலை 5.45 மணி வரை)

விண்ணப்பிக்கும் முறை

முதலில் https://hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர்,
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
எண்.315, தாங்கசாலை தெரு,
சென்னை - 600 003.

27.01.2026 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+