தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர், கண்டக்டர் பணியிடங்கள்.. வெளியானது அறிவிப்பு
சென்னை: அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
தமிழகத்தின் MTC, SETC, TNSTC போன்ற 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஹெவி வெகிக்கில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1.1.2025 அன்று தேதிபடி 18 மாதங்கள் கட்டாயம் பணி அனுபவம் இருக்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 01.07.205 அன்று தேதிப்படி 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ் டி, பிரிவினர் என்றால், 24 முதல் 45 வயது வரை விண்ணபிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர் எக்ஸ் சர்வீஸ்மேன் என்றால் 50 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிசி, எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்டி எஸ்க் சர்வீஸ்மேன் பிரிவினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதிகள்:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 160 செண்டி மீட்டர் உயரம் உடையவராக இருத்தல் வேண்டும். இதேபோன்று குறைந்தது 50 கிலோ எடை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
நல்ல கண்பார்வை பெற்றவராக இருத்தல் வேண்டும். எவ்வித உடல் குறைபாடுகள் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 590 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த பணியிடங்களுக்கு நாளை 21 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2025 ஆகும்.
-
சேலம் மாவட்டத்தில் வேலை.. 197 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்க விட்றாதீங்க! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications