மனங்களை குளிர்வித்த மாமழை!... சமூகவலைதளங்களில் கரைபுரண்டோடும் மழைக்கவிதைகள்!
தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த மழை வறண்டு கிடந்த மனங்களை கவிதை எழுதத் தூண்டியுள்ளது.
சென்னை : மழையின்றி காத்துக்கிடந்த வறண்ட நிலங்களைப் போல மனங்களும் மழைக்காக ஏங்கிக்கிடந்துள்ளது என்பதை இன்று டுவிட்டரில் பலர் மழைக்காக வெளியிட்டிருக்கும் கவிதைகள் காட்டுகின்றன.
மழைக்காலத்தில் நீரை சேமித்து வைக்காததன் அருமையை உணரத் தொடங்கியுள்ளனர் மக்கள். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், பொய்த்துப் போன விவசாயம் என்று நீரின்றி எதுவும் அசையாது என்பதை இயற்கை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
சரியான நீர் மேலாண்மை இல்லாததால் விளைநிலங்கள் கரிசல் காடுகளாகிப் போன. மழை தலைக்காட்டுமா என்று ஏங்கிக் கிடந்த நிலங்கள் போல மனங்களும் மழைக்காக ஏங்கின. இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக நேற்று இரவு முழுவதும் பெய்த மழை வார இறுதி நாளான இன்றைய அதிகாலைப் பொழுதை ரம்மியமான பொழுதாக்கியது.
மழையை ரசித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கவிதைகளின் சில தொகுப்புகள் இதோ:
|
தோரணம் கட்டும் மழை
ஆடி மாதத்தில் கோவில்களில் வேப்பிலை தோரணம் கட்டினால், மழைச் சாரல்கள் சார சாரயாய் தோரணம் கட்டுகிறது. சடசடவென விழும் சாரல்கள் படபடவென பட்டுத்தெறிக்கும் வரிகளை உண்டாக்கியுள்ளது.
|
# மழை முத்தம்
மேககூட்டங்கள் நடுவே மழை இருக்கிறதென்று தெரியவில்லை. அதனால்தான் தென்றல் தொட்டு மழைநீர் மண்ணை முத்தம் இடுகின்றது என்று டுவீட்டியுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
வெள்ளி முத்து
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறைக்கு மண்வாசனையையும் மழையின் நிறத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த கவிதை. துள்ளி விழும் தூறலை அள்ளி தெளித்தால் மனம் தெளிவாகும்.
|
வருக வருக!
மண்ணை வளமாக்கும் மழையை வரவேற்று டுவீட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர் இந்தக் கவிதையை. இயற்கையின் வரத்தை வரவேற்கும் அழகிய கவிதை.
|
அழு வானமே அழு
வானம் அழுதால் தான் மழை. வானமே நன்றாக அழு நீ அழவில்லையென்றால் ஏழை விவசாயிகளின் தற்கொலைக்காக நாங்கள் அழ வேண்டியிருக்கும் என்று டுவீட்டியுள்ளார் மற்றொரு நெட்டிசன்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications