தமிழகத்தில் இன்று
மே 5-ல் திருச்சியில் பா.ம.க செயற்குழு அவசரக் கூட்டம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு அவசரக் கூட்டம் மே 5-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ்காங்கிரஸுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து மோதல்கள் நடந்து வரும் இந் நேரத்தில் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் முதல்வர் மு. கருணாநிதி, இரு கட்சிக்கும் இடையேயான மோதலைத் தவிர்க்கநடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸும் கட்சிப் பிரமுகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரும் முடிவில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி திடீரென்று தனது முடிவைமாற்றிக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இப்படி அடிக்கடி தனது கருத்தை மாற்றிக் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியிலிருந்து விலக்க திமுக முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய அரசில்இரு அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்கள் உள்ளனர்
இந்தப் பின்னணியில் பாட்டாளி மக்கள் கட்சியில் அவசர செயற்குழுக் கூட்டம் மே 5-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications