தமிழகத்தில் இன்று
பா.ம.கா-வின் -சீட் பேர-மும்...கல-கக்-கும் கூட்-ட--ணி-க-ளும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழசட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. இந்த நிலையில் தமிழ அரசியல் கட்சிகளின்கூட்டணி வியூகங்களும் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை இருந்த கூட்டணி கட்சிகளின் நிலை மாறி அடுத்தடுத்தகாட்சிகள் ஆரம்பிக்க இருக்கின்றன.
தமிழகத்தைப்பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகள் திராவிடக்கட்சிகளின் ( அ.தி.மு.க அல்லது தி.-மு.க )துணையோடுதான் , கூட்டணி அமைத்துச்செயல்படுகின்றன. தற்பொழுதை கூட்டணி -நிலவரப்படி தி.-மு.கவுடன்பா.ஜ.க, ம.தி.-மு.க, பா.ம.க , இன்னும் சில கட்சிகளும் கூட்டணி யாக இருக்கின்றன.
அ.தி.மு.க வோடு காங்கிரஸ், த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் சில கட்சிகள் கூட்டணி கட்சிகளாகஇருக்கின்றன. இந்த -நிலையில், தற்பொழுது தங்களுடன் இருக்கின்ற கட்சிகளின் செல்வாக்கு பற்றி , தி.மு.க.,அ.தி.-மு.க இருகட்சிகளின் தலைவர்களுமே ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதா தமிழகம் முழுக்க ஒரு சர்வேயே -நடத்திடித்துவிட்டார் என்கிறார்கள். அந்த -முடிவின் படிதான் வரும்மாதங்களில் , ஜெயலலிதாவின் அணுகுறையும் இருக்கும். அந்த சர்வேயில் ஜெயலலிதா, த.மா.கா, காங்கிரஸ் ,பா.ம.க ஆகிய கட்சிகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்தாராம்.
அதில் த.மா.கா வோ , காங்கிரஸ் கட்சியோ அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் அந்த கட்சிகளுக்குத்தான்பலமே தவிர, அ.தி.-மு.கவுக்கு மிகவும் அ-தி-கமான -ஓட்டு கிடைக்க வழியில்லை. அதே -நரத்தில் பா.ம.கவுக்கு ,வடமாவட்டங்களில் கணிசமான அளவு ஓட்-டு வங்-கி உள்-ள-து.
40 தொகுதிகளில் பா.ம.க எந்த கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றதோ அந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கின்றது என்று அந்த சர்வே -ரிப்போர்ட்டில் இருக்கிறதாம். -இ-து தி-மு-க-வுக்-கும் -த-ரி-யு-ம். தற்பொழுதுராமதாஸ் தி.-மு.க அணியில் தான் இருக்கிறார்.
இதற்கு நடுவே, அ.தி.-மு.கவின் ஜெயலலிதா பேரவை தலைவரும், கட்சியின் எம்.பியுமான தினகரன் மற்-றும்பா.ம.க தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி இருவரும் சந்தித்துப்பேசி- வ-ரு-வ-தா-க அரசியல் வட்டாரங்களில்பேச்சு அடிபட்டது. இதை இரு தரப்பின-ரும் ம-றுத்-து வந்-தா-லும் சந்திப்பு நடந்தது உண்-மை என்-கின்-ற-னர். இதுஎதிர்கால அரசியல் கூட்டணிக்கான அஸ்திவாரம் தான் என்கிறார்கள்.
இலங்கைப் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும், ராமதாஸ் அ.தி.மு.கவும் இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்துதான் இலங்கையில் தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும்.இதற்கு இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்து,சுகமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விட்-டார். இந்த விஷயம் கூட எதிர்காலகூட்டணிக்கான ஒ-ரு ஒத்திகைதான் என்கிறார்கள்.
தி.மு.க தலைவர் கருணாநிதி---யா ராமதாஸ் -நம் கூட்டணியில் தொடர்ந்து இருப்பாரா, இருந்தால் எவ்வளவு சீட்கேட்பார் என்று விசாரித்தாராம். அதற்கு உளவுத்துறை அதிகாரிகள் 50 சீட் வரை கேட்பார் என்று சொல்கிறார்கள்என்று தகவல் கொடுக்க அதிர்ந்து போனாராம் கலைஞர்.
ராமதாஸின் சமீபகால போக்கும், தி.-மு.கவுக்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு என்று விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் ஏதாவது பேசிவிடுகிறார்கள். அவர்கள் மீதுநடவடிக்கை எடுத்தாலும், தி-முக அரசு தமிழர்களுக்கு எதிரான அரசு என்று பிரச்சனையைபெ-ரியதாக்கிவிடுவார்கள். -நடவடிக்கை எடுக்காவிட்டால் , மத்திய அரசு , எதிர்கட்சிகள் குரல் கொடுக்கும். ஏன்இப்படி சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள் என்று வருத்தப்படுகிறாராம் கருணாநிதி.
1984- ம்வருடம் மதுரையில் கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாநாடு ஒன்றை -நடத்தினார் . அந்தமா-நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல அரசியல் கட்சி பிர-மு-கர்களும் கலந்து கொண்டனர். அதேமாதி-ரிகருணா-நிதி இப்பொழுதும் ஒரு மா-நாடு -நடத்தவேண்டும் என்று தனது தர்மபு-ரி மாவட்ட சுற்றுப்பயணத்தில்கோ-ரிக்கை விடுத்தார் ராமதாஸ். இப்பொழுதுள்ள - நிலையில் மிக வெளிப்படையாக பேசமுடியாத விஷயத்தைசுட்டிக்காட்டி , தர்மசங்கடத்தில் மாட்டிவிடுகிறார் என்றே -நினைக்கிறாராம் கருணா-நிதி.
மொத்தத்தில் , வருகின்ற தேர்தலில் குறைந்து -நாற்பது எம்.எல்.ஏ தொ-கு-தி-க-ளை-யா-வ-து பா.ம.கவுக்குவாங்கிவிடவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ராமதாஸ் தி.மு.கவோ ,அ.தி.-மு.கவோ எந்தஅணியில் அதிக சீட் கிடைக்கிறதோ அந்த அணியுடன் தான் கூட்டணி என்பதிலும் தெளிவாகவே இருக்கிறாராம்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications