ராமதாஸ்-வாழப்பாடி: விஸ்வரூபம் எடுக்கிறது ரூ. 2.5 கோடி விவகாரம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருப்பதுகுறித்து சி.பி.ஐ, மற்றும் வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் எனறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் தொலைபேசிஆலோசனைக்குழு, மற்றும் சென்சார்போர்டு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளேன்.
தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சித் தலைவராக வாழப்பாடிராமமூர்த்தி உள்ளார். அவரது மனைவி பள்ளி ஆசிரியையாக உள்ளார்.மத்திய அமைச்சராகவும், பல முறை எம்.பியாகவும் வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார்.
இவருக்கு வேறு எந்த வழியிலும் வருமானம் கிடையாது. மத்திய அமைச்சராக இருந்த போது இவர் பெருமளவில் சொத்துசேர்த்ததாக குற்றுச்சாட்டு உள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் ஒண்ணறை கோடி ரூபாய்க்கு ஒரு கட்டிடத்தை வாங்கிஇருபத்தைந்து லட்ச ரூபாய் செலவில் அதை புதுப்பித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் சீட் பெறுவதற்காக இரண்டரை கோடிரூபாய் ராமதாசுக்கு கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளார். இவரது பேட்டி பல பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறையில் நான்விசாரித்தேன். இந்த பணம் கொடுத்த விவரம் பற்றி வருமான வரித் துறையினரிடம் வாழப்பாடி ராமமூர்த்தி எதுவும்தெரிவிக்கவில்லை.
இவரது வருமானம், பினாமி முதலீடுகள், அறக்கட்டளையின் நிதி பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடிரூபாயை வாழப்பாடி ராமமூர்த்தி அளித்தது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ,மற்றும் வருமான வரித்துறைக்கு உத்திரவிடவேண்டும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது குறித்தும் விசாரிக்க உத்திரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
நான் ராமதாசுக்கு ரூ. 2.5 கோடி தேர்தல் செலவுக்குக் கொடுத்தேன் என வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதை இதுவரை ராமதாஸ்மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ்-வாழப்பாடி ராமமூர்த்தி பிரச்சனை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கருணாநிதிக்குதலைவலியாகவே இருந்து வருகிறது.
தன்னை ஓரம் கட்டுவதற்காக வாழப்பாடியை கருணாநிதி தான் தூண்டிவிட்டு வருவதாக ராமதாஸ் கருதுகிறார்.
இந்த புதிய வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பில் ஜெயலலிதா தவிர்த்து பிற தலைவர்களின் பண பலம் குறித்தவிரைவிலேயே வெளிவர வாய்ப்புள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications