ராமதாஸ்-வாழப்பாடி: விஸ்வரூபம் எடுக்கிறது ரூ. 2.5 கோடி விவகாரம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருப்பதுகுறித்து சி.பி.ஐ, மற்றும் வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் எனறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் தொலைபேசிஆலோசனைக்குழு, மற்றும் சென்சார்போர்டு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளேன்.
தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சித் தலைவராக வாழப்பாடிராமமூர்த்தி உள்ளார். அவரது மனைவி பள்ளி ஆசிரியையாக உள்ளார்.மத்திய அமைச்சராகவும், பல முறை எம்.பியாகவும் வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார்.
இவருக்கு வேறு எந்த வழியிலும் வருமானம் கிடையாது. மத்திய அமைச்சராக இருந்த போது இவர் பெருமளவில் சொத்துசேர்த்ததாக குற்றுச்சாட்டு உள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் ஒண்ணறை கோடி ரூபாய்க்கு ஒரு கட்டிடத்தை வாங்கிஇருபத்தைந்து லட்ச ரூபாய் செலவில் அதை புதுப்பித்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் சீட் பெறுவதற்காக இரண்டரை கோடிரூபாய் ராமதாசுக்கு கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளார். இவரது பேட்டி பல பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறையில் நான்விசாரித்தேன். இந்த பணம் கொடுத்த விவரம் பற்றி வருமான வரித் துறையினரிடம் வாழப்பாடி ராமமூர்த்தி எதுவும்தெரிவிக்கவில்லை.
இவரது வருமானம், பினாமி முதலீடுகள், அறக்கட்டளையின் நிதி பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடிரூபாயை வாழப்பாடி ராமமூர்த்தி அளித்தது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ,மற்றும் வருமான வரித்துறைக்கு உத்திரவிடவேண்டும்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது குறித்தும் விசாரிக்க உத்திரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
நான் ராமதாசுக்கு ரூ. 2.5 கோடி தேர்தல் செலவுக்குக் கொடுத்தேன் என வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதை இதுவரை ராமதாஸ்மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ்-வாழப்பாடி ராமமூர்த்தி பிரச்சனை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கருணாநிதிக்குதலைவலியாகவே இருந்து வருகிறது.
தன்னை ஓரம் கட்டுவதற்காக வாழப்பாடியை கருணாநிதி தான் தூண்டிவிட்டு வருவதாக ராமதாஸ் கருதுகிறார்.
இந்த புதிய வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பில் ஜெயலலிதா தவிர்த்து பிற தலைவர்களின் பண பலம் குறித்தவிரைவிலேயே வெளிவர வாய்ப்புள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications