97 வாரங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவீதம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே: கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக, சந்தன வீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், தமிழக மற்றும் கர்நாடகஅரசுகள் பயந்து, சரணடைந்து விட்டதாக உச்ச நீதிமன்றம், தமிழக, கர்நாடக அரசுகளை கடுமையாகச் சாடியுள்ளது குறித்து ...?

ப: முதலில் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம் தேவையில்லாத உக்ரம் கொண்டது - என்றுதான் தோன்றியது. இப்போது, இன்னும் கூட சொல்லியிருக்கலாம்என்று தோன்றுகிறது. எவ்வளவுசொன்னாலும், உறைக்கவில்லையே!

கே: பிரதமரின் மூட்டு அறுவை சிகிச்சையை பத்திரிக்கைகள் இந்த அளவுக்கு பெரிது படுத்துவதேன்?

ப: நமது சமுதாயத்திற்கு நிதானம் இல்லை ; எப்போதுமே, ஒரு நிரந்தரமான போதையில் இருக்கிறது.

கே: தி.மு.க. இப்போது இந்து ஆதரவுக் கட்சியா? இந்து விரோதக் கட்சியா?

ப: தமிழகத்திலா? டெல்லியிலா? டெல்லியில் தி.மு.க. இந்து விரோதக் கட்சியல்ல.

கே: நாயை நன்றியுள்ள பிராணி என்கிறோம். அதையே சில சமயம் நன்றி கெட்ட நாய் என்றும் திட்டுகிறார்களே! இது முன்னுக்குப் பின் முரணாகஉள்ளதே?

ப: நாய்கள் இயற்கையிலேயே நன்றியுணர்வு உள்ள பிராணிகள் என்பதால், அவற்றிடையே ஒரு நாய் நன்றி கெட்டு நடந்து கொண்டால்,அது மிகக்கேவலமாகத் தெரியும் ; அதனால் நன்றி கெட்ட நாயே என்கிறோம்.

மனிதன் பொதுவாக நன்றி கெட்டவன் என்பதால், ஒரு மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கும் போது, அது விசேஷ கண்டனத்துக்குரியதாகத்தெரிவதில்லை.

நன்றி கெட்ட மனிதா என்று சொல்லத் தேவையில்லை. மனிதா என்றாலே போதும்,

கே: பூர்வீகத்தில் தாங்களும் இந்துக்கள்தான் என்பதை முஸ்லிம்களும், கிறஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்சுதர்சன் கூறியுள்ளது பற்றி, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இது பற்றியும், சர்ச்கள் இந்திய சர்ச்களாகவே இயங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது பற்றியும், எனது கருத்துக்களை பின்னர்விரிவாகக் கூறுகிறேன்.

கே: 2006-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும்என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாரே?

ப: அமைச்சரானவுடன், தலை கொஞ்சமாவது சுழலாதா? சரியாகி விடும் ; கவலை வேண்டாம்.

கே: இலங்கையின் தேர்தல் முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததா?

ப: சந்திரிகா அணி இன்னும் கொஞ்சம் நல்ல மெஜாரிட்டி பலம் பெறும் என்று எதிர்பார்த்தேன். இப்படி உன்னைப்பிடி, என்னைப் பிடி, என்ற அளவுக்கு முடிவுஅமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

கே: கிரிக்கெட் சூதாட்டத்தில் கபில்தேவ் குற்றமற்றவர் என்பது தெரிய வந்துள்ளதே?

ப: அதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு முன் குற்றச்சாட்டு வந்தது ; ராஜினாமாவுக்குப்பின் அது போய் விட்டது ,என்னவோ போல் இருக்கிறது. திருப்தி இல்லை.

கே: பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ...?

ப: பீகார் நிலைமைக்குத் தீர்வு - நான் முன்பே கூறியதுதான் ; அங்கு எமர்ஜென்சி கொண்டு வரப்பட வேண்டும்.

கே: விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்த வி.பி.சிங் ஆரம்பித்து விட்டது பற்றி ...?

ப: பாவம் விவசாயிகள். சோதனை மேல் சோதனை.

கே: சிரிமாவோ பண்டாரநாயகாவின் திடீர் மறைவு குறித்து?

ப: அவருடைய குடும்பத்தாருக்கு நமது அனுதாபங்கள் உரித்தாகுக.

கே: மு.க. ஸ்டாலின் வீட்டில் கூட சாமி அறை உள்ளதே என்று திருவாரூர் கே. தங்கராசு (தமிழ்நாடு திராவிடர் கழகம்) ரொம்பவும்ஆதங்கப்படுகிறாரே? ஏன்?

ப: இது என்ன எண்ணம்? யாருமே உருப்படக் கூடாதா?

கே: நீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்தில் அடுத்து எம்,ஜி.ஆர். ஆட்சி அமைவது உறுதி என்று ஜெயலலிதா அடித்துச்சொல்கிறாரே? இந்த மனோதிடம் வேறு எந்த அரசியல்வாதிக்கு வரும்?

ப; யாருக்கும் வராது. சென்ற முறை பா.ஜ.க. அரசைக் கவிழ்த்த போது, அடுத்த ஆட்சி பதவியேற்கும் ; நானே கூட பிரதமர் ஆகலாம் என்று கூறிமனோதிடத்தைக் காட்டி பழக்கப்பட்டவருக்குத்தான் வரும்.

கே: சந்தன கடத்தல் வீரப்பன், தான் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் இனிமேல் தமிழக, கர்நாடக அரசுகளின் அதிரடிப் படைகளை அனுப்பக் கூடாது என்று உத்திரவாதம் கேட்பது பற்றி ... ?

ப: நியாயம் தானே? ராஜ்குமார் விடுதலைக்கான முயற்சிகள் என்ற பெயரில் நடப்பது உண்மையில், வீரப்பன் விடுதலைக்கான முயற்சிகள் தானே?அப்படியிருக்க அனாவசியமாக போலீஸ் எதற்கு?

கே: திருநாவுக்கரசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிட்டாததற்கு தி.மு.க.தான் காரணமா?

ப: தி.மு.க.வும் காரணமாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

கே: அடுத்த முறை தூதுக் குழுவினர், காட்டிலிருந்து ராஜ்குமாரை மீட்டு வந்து விடுவார்களா?

ப: இவர்களெல்லாம் ஏற்கனவே என்ன பேசி முடித்து வைத்திருக்கிறார்களோ - அது நடக்கும். நாடகத்தை எழுதிய அவர்களுக்குத்தான், அதன்க்ளைமாக்ஸ் காட்சி என்ன என்பது தெரியும். என்னைக் கேட்டு என்ன பயன்.

கே: நான் தங்கள் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அறிவு இல்லை.

ப: வேலைக்கு வேண்டிய தகுதி உங்களுக்கு இருக்கிறது. சரி. ஆனால் வேலை காலி இல்லையே.

கே: வால்டர் தேவாரம், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த கருத்துக்கள் எப்படி?

ப: திருப்தியாக இருக்கிறது. ஆனால் என்ன பயன்? இவ் விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் தமிழக அரசுக்கு உறைக்காது போலிருக்கிறதே.

கே: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் ; கொடுத்தாலும் ஏற்க மாட்டோம் என்று கூறும் ராமதாஸ், மத்திய ஆட்சியில் மட்டும்பங்கு வகிப்பது ஏன்?

ப: மத்தியில் பங்கு வகிப்பது இருக்கட்டும். பாண்டிச்சேரியில் கூட ஆட்சி வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை என்பதுதான் ஜெயலலிதாவின்கவனத்திற்குரியது.

கே: ஜெயலலிதா மற்றும் பலர் பெற்றிருக்கும் தண்டனைக்கு, பாராட்டுக்குரியவர் சுப்ரமண்யம் ஸ்வாமியாயா? சென்னா ரெட்டியா?

ப: ஜெயலலிதா பெற்ற தண்டனைக்கு யாரையாவது பாராட்டித்தான் தீர வேண்டும் - என்று நீங்கள் நினைத்தால், சசிகலாவைப் பாராட்டுங்கள்,அர்த்தமிருக்கும்.

கே: ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியில், சாம்பியன் பட்டத்தை இந்தியா கோட்டை விட யார் காரணம்?

ப: குறிப்பாகச் சொல்வதானால் - இரண்டு ரன் அவுட்களுக்க்குக் காரணமாகி, அது தவிர வெங்கடேஷ் பிரசாத்துக்கு தனது ஓவர்களைப் பூர்த்திசெய்கிற வாய்ப்பளிக்காமல் இருந்த கஙகூலி ஒரு காரணம் ; மெதுவாக ரன் எடுத்து பல ஓவர்களை வீணடித்த திராவிட் ஒரு காரணம்.

பொதுவாகச் சொல்வதானால், நமது கிரிக்கெட்டின் லட்சணம் காரணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+