வயதான மாடுகளை ஏலம் விடாதீர்
சென்னை:
வயதான மாடுகளை ஏலத்தில் விற்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச்சேர்ந்த சாந்திலால் ஜெயின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சயாத்துக்கள் பசு, காளை எருமை மாடுகளை பராமரிக்கின்றன. இவை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உழைப்பின் பலனை உறிஞ்சிய பிறகு , அவற்றை இறைச்சிக்காக ஏலம் விடுகின்றனர். இந்த மாடுகளால் எந்தப் பலனும் இல்லைஎன்பதால் இவற்றை பராமரிக்க முடியாது என்று காரணம் கூறப்படுகின்றது.
உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஓய்வூதிய சலுகைகளை அரசு அளிக்கின்றது. பின்னர் அவர்களின் வாரிசுகளுக்கும் அளிக்கப்படுகிறது. ஆனால் பணம் இல்லைஎன்று மாடுகளை மட்டும் ஏலத்தில் விற்பது ஏன் என புரியவில்லை.
விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புக்கு அரசு நிதி உதவி செய்யலாம். இந்த அமைப்புகளிடம் வயதான விலங்குகளை ஒப்படைக்ககலாம். எனவே, வயதானவிலங்குகளை ஏலத்தில் விற்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
தற்பொழுது எத்தனை விலங்குகள் உள்ளாட்சிஅமைப்புகள் வசம் உள்ளன என்பது குறித்த அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுமாறுஉத்திரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதி சம்பத் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள்பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் விலங்குகள் நில வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications