தடையை நீக்க கோர்ட்டை நாடுவேன் ...ஜடேஜா
டெல்லி:
கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளதடையை நீக்க வாரியத்திடம் கோருவேன். மறுத்தால், நீதிமன்றத்தில் முறையிடுவேன்என்று கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.
தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜடேஜா பேசுகையில், சி.பி.ஐ. என் மீதுநீதிமன்றத்தில் எந்த வழக்கும் போடவில்லை. எனவே என் மீதான புகார்களை நான்நீதிமன்றம் சென்று மறுக்கவில்லை.
சி.பி.ஐ தரப்பில் என் மீது வழக்குப் போட்டிருந்தால்,அதை மறுத்து நானும் மனுசெய்திருப்பேன். வாரியத்தில் என் மீதான புகார் தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட்வாரியத்தில் தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதன்படி எனக்குத் தண்டனைஅறிவித்துள்ளனர். அப்பீல் செய்யவும் இறுதி வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
அதன்படி அப்பீல் செய்யவுள்ளேன். அப்பீலில் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்கோர்ட்டை நாடத் திட்டமிட்டுள்ளேன். என் மீதான புகாரை தவறு என்று நிச்சயம்நீதிமன்றத்தில் முறையிடுவேன்.
எனது அரசியல் தொடர்புகள் காரணமாக பத்திரிகைகள் என் மீதான மேட்ச் பிக்ஸிங்புகாரை பெரிதுபடுத்தின. ஐந்து ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள வீரர்களில்சிலர், நீண்டகாலமாக விளையாடவில்லை, சிலரோ ஓய்வு பெற்று விட்டனர். எனக்கும்அதோபோன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்?
எனது சொத்துக்கள் அனைத்தும் சரியான முறையில் வாங்கப்பட்டவையே. நாங்கள்பணமே சம்பாதிக்கவில்லையா?. நான் குடியிருக்கும் கிரேட்டர் கைலாஷ் பகுதியில்உள்ள 12 பிளாட்டுக்களில் ஒன்று மட்டுமே எனக்குச் சொந்தமானது.
சைப்ரஸ் நாட்டிலுள்ள சொத்து எனது சகோதரர் ஜெய் ஜடேஜாவுக்குச் சொந்தமானது.எனது நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் இருக்கிறார். அவர் எனது ஒன்று விட்டசகோதரர். ராஜ்கோட் ராஜ பரம்பரையின் வாரிசு.
ஜெய் ஜடேஜாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு,அவரது பெயரில் நான்சைப்ரஸில் பிசினஸ் செய்வதாக கூறுகிறார்கள். அவரது வீட்டைக் கூட எனது வீடுஎன்கிறார்கள்.
அஸாருதீனும், கபில்தேவும் நான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. அவர்களே என்னிடம் இதைத் தெளிவாகக்கூறியுள்ளனர் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications