ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.
கேள்வி - பதில்
கே: வாஸ்து சாஸ்திரப்படி கோட்டையின் (தலைமைச் செயலகம்) வாயிலை மாற்றி அமைத்தால்,தமிழகத்தில் நல்ல ஆட்சி கிடைக்க வாய்புண்டா?
ப: வாஸ்து- வின்படி என்ன நடக்கிறது என்பது தெரியாது. வாஸ்தவமான நிலையின்படி, தமிழகத்தில் நல்லஆட்சிக்கு இப்போதைக்கு சான்ஸ் இல்லை.
கே: சந்தன வீரப்பன் பிடியில் இருந்து ராஜ்குமாரை மீட்க தாமதம் ஏற்பட்டதற்கு, நக்கீரன் கோபாலேகாரணம். அவரை அனுப்பாமல் வேறு யாரையாவது அனுப்பியிருந்தால், சீக்கிரமாகவே ராஜ்குமாரைமீட்டு வந்திருப்பார்கள் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருப்பது குறித்து ...?
ப: நக்கீரன் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுப்பது இப்போது ஃபாஷன் ஆகிவிட்டது. இதில் நான் வேறு சேரவேண்டுமா?
கே: போலி வாக்காளர்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது அதிகமான தண்டனையாக நீங்கள்கருதுகிறீர்களா?
ப: போலி வாக்காளர்களின் ஓட்டுகள், மற்ற மக்களை 5 ஆண்டு சிறையில் தள்ளுகிறதே - அது பரவாயில்லையா?
கே: தமிழக அரசு வீரப்பனை பிடிக்கும் நடவடிக்கையை எடுக்கிறாதா. அல்லது எடுப்பது போல்நடிக்கிறதா?
ப: நடிப்பது போல் நடக்கிறது.
கே; மத்திய அமைச்சர் முரசொலி மாறன், நல்லபடியாக உடல் நலம் தேறி வீடு வந்துள்ளது பற்றி ...?
ப: விரைவில் அவர் பூரண குணமடையட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
கே: வாழப்பாடி, ராமதாஸ் இருவரும் தனித்தனியே பிரதமரை சந்தித்தார்களே! என்ன பேசிஇருப்பார்கள் ...?
ப: இருவரும் ஒரே மாதிரிதான் பேசியிருப்பார்கள்: அவர் சொல்வதை நம்பாதீர்கள்.
கே: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்தின் வயது குறித்த சர்ச்சையில், நீங்கள் எந்தப் பக்கம் ...?
ப:எது உண்மை என்பது இறுதியாக வெளியாவதற்காகக் காத்திருப்பவர்கள் பக்கம்.
கே: தமிழக அரசு தரும் கலைமாமணி விருது, வருடா வருடம் அதிகம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டுவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி ...?
ப: விருது பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்த அளவுக்கு கலையில், இலக்கியத்தில் தமிழகம்வளர்ச்சி பெற்றிருக்கிறது. என்று அர்த்தம் என்று முதல்வர் பேசியிருக்கிறார்.
இதே லாஜிக்படி பார்த்தால் - அரசு திட்டங்களினால் பயன்பெறும் ஏழைகள் எண்ணிக்கை இவ்வளவுகூடியிருக்கிறது என்று கணக்கு தரப்படுவதால், தமிழகத்தில் ஏழைகள் எண்ணிக்கை வளர்ச்சி பெற்று வருகிறதுஎன்றுதானே அர்த்தம்!
கே: வால்மீகி கூட கொள்ளைக்காரணாகத்தான் இருந்தார். பிறகு மனம் மாறி ராமாயணம்எழதவில்லையா?அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அது போல் வீரப்பனை ஏற்றுக் கொள்ளவேண்டும். என்று நெடுமாறன் கூறியிருப்பது பற்றி ...?
ப: மெய் சிலிர்க்க வைக்கிற நியாயம்! அடுத்து அவரிடமிருந்து வரப்போகிற இதே மாதிரி அறிவு பூர்வமானநியாயவாதம் எதுவோ! மனைவியை வீட்டை விட்டுத் துரத்தினார் ராம்ர்; அவர் தெய்வமாக ஏற்கப்படவில்லையா?அதே போல் மனைவியை வீட்டை விட்டு துரத்தியவர்கள் எல்லோரையும் தெய்வங்களாக வழிபட வேண்டும்என்று சொல்வாரோ!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications