தேர்தலுக்காக 52 ஆயிரம் போலீசார்
சேலம்:
52 ஆயிரம் போலீசார் தமிழகத் தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு அளிப்பார்கள் என சேலத்தில் தமிழக டி.ஜி.பி.ராஜகோபால் தெரிவித்தார்.
சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக டி.ஜி.பி. ஆர்.ராஜகோபாலன் கூறியதாவது;
தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் தேர்தலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், அண்டை மாநில போலீசார் மற்றும் துணை நிலைராணுவத்தினர் ஆகியோர் இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சுமார் 52 ஆயிரம் போலீசார், 30 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 11 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்இப்பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தேவையான அளவுக்கு உதவிட துணை நிலை ராணுவப் படையினர்தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் நான்கு விதமான பிரச்னைகள் எழக் கூடும் என திட்டமிட்டுள்ளோம். இதன்படி ஜாதிக் கலவரம்அதிகம் ஏற்படும் பகுதியை ஒரு பகுதியாகப் பிரித்துள்ளோம். அரசியல் தகராறு ஏற்படும் பகுதியைகண்டறிந்துள்ளோம்.
வீரப்பன் நடமாட்டம் உள்ள பகுதிகளையும், நிக்சலைட்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகள் எனவும் பலஇடங்களைப் பிடித்துள்ளோம். நான்கு பகுதிகளாக இவை பிரிக்கப்பட்டுள்ளது.
பிரச்னைக்குரிய தொகுதிகள் மற்றும் சென்சிட்டிவ் எனக் கூறப்படும் தொகுதிகள் என 154 தொகுதிகளை இனம்கண்டுள்ளோம். இந்த தொகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.
வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. வீரப்பனுடன் இப்போது அதிகம் பேர் இல்லை. அவனுடன்,இப்போது சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுண்டர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். வீரப்பன் நடமாட்டம் குறித்துஓரளவு தெளிவு பெற்றுள்ளோம். எனவே அவனை விரைவில் பிடித்து விடுவோம்.
காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ. 13.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாகஅளித்துள்ளது.
மீண்டும் தற்போது இரண்டாவது கட்டமாக ரூ. 29 கோடி ரூபாய் அளித்துள்ளது. காவல் துறையை நவீனப் படுத்த68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் காவல் துறைக்கு 449 வாகனங்கள் வாங்க முடிவுசெய்துள்ளோம் என்றார் டி.ஜி.பி ராஜகோபாலன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications