For Daily Alerts
Just In
சென்னையில் திடீர் மழை
சென்னை:
புதன்கிழமை மாலை சென்னையில் பெய்த திடீர் மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் சென்றது.
இம்மழையினால், கடந்த சில வாரங்களாகக் கொளுத்தி வந்த சென்னை வெயிலின் வெப்பம் குறைந்தது.
புதன்கிழமை காலையில் கூட, 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. மாலை 5.30க்குப் பெய்யஆரம்பித்த மழை, 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
நெய்வேலியிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் குடிநீரை எதிர்பார்த்து, வாடி வதங்கிக் காத்துக் கொண்டிருந்தமக்களுக்கு இம்மழை பெரிதும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
Comments
Story first published: Thursday, June 21, 2001, 5:30 [IST]