இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 4 மீனவர்கள் காயம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடலில் காணாமல் போன தங்கள் நண்பர்களைத் தேடிச் சென்றவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலில் மீன் பிடிக்கச்சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேர் திரும்பி வரவில்லை. இதனால் அவர்களைத் தேடிஅவர்களின் நண்பர்கள் 4 பேர் கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் தங்கள் நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தஇலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது மரப்பலகையால் தாக்கியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இதில் 2 மீனவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
மேலும் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
மேலும் கானாமல் போன அந்த 4 மீனவர்கள் சென்ற படகு கச்சத் தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையில் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து அவர்களையும் இந்த காயமடைந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார்கூறினர்.