For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும்தமிழக அரசு எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சட்டசபையில் கூறினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்தராஜேந்திர பிரசாத் கூறியதாவது:

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து இலங்கை எல்லைக்குள் செல்லும்போது,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி, இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தேவையானசிகிச்சையை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார் ராஜேந்திர பிரசாத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X