For Daily Alerts
Just In
ஜெ. புறக்கணிப்பு... சோனியாவிடம் இளங்கோவன் புகார்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குக் காங்கிரஸுக்குஅழைப்பு அனுப்பாதது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறியிருப்பதாக தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிடும். வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்துதேர்வு செய்து வைத்துள்ளோம்.
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்துசெவ்வாய்க்கிழமை மாலைக்குள் தெரிந்து விடும்.
ஜெயலலிதா கூட்டிய கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்துகட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறியுள்ளேன் என்றார் அவர்.
Comments
Story first published: Tuesday, September 18, 2001, 5:30 [IST]