இன்று மாலை உருவாகிறது காங்கிரஸ் மெகா கூட்டணி
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அறிவிக்கும் என்றுஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவை காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. புதியதமிழகம், மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவுள்ளன.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியுடன் எந்த எந்த கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளவிருக்கின்றன என்பதுகுறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என்று ரமேஷ் சென்னிதாலாதெரிவித்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தற்போது சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவை எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.
தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனும், அக்கட்சியைக் கலைத்துவிட்டு, கட்சி உறுப்பினர்களுடன்மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.
எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள புதிய தமிழகமும் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின், எந்தெந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணிஅமைத்துள்ளன, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்த விவரம் வெள்ளிக்கிழமை மாலைஅறிவிக்கபப்படும் என்று கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தொடர்பான விவரம் எதுவும் எனக்குதெரியாது.
அதிமுக அணியிலிருந்து வெளியேறியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு நாங்கள்அழைக்கவில்லை. அவர்களும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது கட்சி தலைமை எடுத்த முடிவு. சோனியா காந்திசொன்னதன் பேரிலேயே காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் அவர்களுடனான நட்புறவு தொடர்கிறதுஎன்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications