அமெரிக்காவில் ராகுல் காந்தியிடம் எஃப்.பி.ஐ. விசாரணை
டெல்லி:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகன் ராகுல் காந்தியிடம் அமெரிக்கபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 1 மணி நேரத்திற்கும் மேலாக துருவித்துருவிவிசாரணை நடத்தினர்.
ராகுல் காந்தியின் பாஸ்போர்ட். விசா உள்ளிட்ட அனைத்தும்சோதனைக்குட்படுத்தப்பட்டன. ராகுல் காந்தியின் பையும் முழுமையாகசோதனையிடப்பட்டது. அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரும் ராகுல் காந்திபயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் அவரை விமானநிலையத்திலேயே உட்கார வைத்துவிட்டனர்.
ராகுல்காந்தி தான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் என்றுகூறியதையும் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த தகவல் ராகுலின் -தா-யும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமானசோனியா காந்திக்கு கிடைத்தது. அவர் உடனே அமரிக்காவிலிருக்கும் இந்திய தூதர்லலித் மான்சிங்கை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மான் சிங் கேட்டுக்கொண்டபின் ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும்கூறப்படுகிறது.
ஆனால் மான்சிங் கேட்டுக் கொண்டதால்தான் ராகுல் காந்தி பயணத்தை தொடரஅனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரக அதிகாரிகள் கூறுகையில், சோனியாகாந்தி மான்சிங்கை தொடர்பு கொள்ளவில்லை. அமெரிக்க அதிகாரிகள் ராகுல்காந்தியை சோதனையிட்ட பின் அவரை அனுப்பிவிட்டனர் என்றனர்.
இந்தியாவில் ராஜிவ்காந்தியின் குடும்பத்தினர் அனைவரும் எஸ்.பி.ஜி. சிறப்புஅதிரடிப் படையினரின் பாதுகாப்பில் உள்ளனர். ராகுல் காந்தியை அமெரிக்கஉளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது இந்திய அதிகாரிகள் மற்றும்காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி.ஜி. பாதுகாப்பில் இருக்கும் நபர் வெளிநாடு சென்றால் அந் நாட்டுக்கு இந்தியஅரசு முன்பே தகவல் கொடுக்கும். இதனால் அந்த நாட்டு போலீசார் அவருக்குபாதுகாப்பு வழங்குவது வழக்கம்.
ஆனால், அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு எந்த விதமான பாதுகாப்பும்வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அரசின் பாதுகாப்பு வளையத்தில்இல்லாத ஒருவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் அமெரிக்கஅதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து வெளிநாட்டினர்அனைவரிடமும் விசாரணை நடக்கிறது. அதேபோல ராகுல் காந்தியிடமும்சோதனையிட்டப்பட்டது. இதில் பிரச்சனை என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள்கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications