ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை
தெஹ்ரான்:
அமெரிக்க போர் விமானங்கள் தனது வான் வெளி மீது பறக்கக் கூடாது என ஈரான் தடை விதித்துள்ளது. மீறி பறந்தால் அந்தவிமானங்களை தாக்குவோம் எனவும் ஈரான் அறிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல்களில் இருந்தும், குவைத், சவுதி அரேபியா ஆகிய இடங்களில்உள்ள தனது தளங்களில் இருந்தும் போர் விமானங்களை இயக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இங்கிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் விமானங்கள் ஈரான் வழியாகத் தான் பறந்தாக வேண்டும். இப்போது பல உளவுவிமானங்களை ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பறக்க விட்டுள்ளது. இந்த விமானங்கள் ஈரான் வான்வெளி வழியாகத் தான்பறந்து செல்கின்றன.
இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஈரானின் மூத்த ராணுவ அதிகாரிகளில் ஒருவரான ரியர் அட்மிரல் அலிஷம்கானி கூறுகையில், தெரியாமல் ஈரான் வான்வெளியில் வந்துவிட்டதாக இதைக் கருத முடியாது. திட்டமிட்டுத் தான் ஈரான் மீதுபறக்கின்றனர். இதை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
ஈராக் மீதான தாக்குதல் நடத்தியபோது கூட அமெரிக்க விமானங்களும், ஏவுகணைகளும் ஈரான் வான் எல்லையை மீறன.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நாங்கள் எதிர்க்கிறோம். இந்தப் பகுதியில் அமெரிக்கா தனதுபடைகளைக் குவிப்பது தேவையில்லாத கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நாங்கள் தலிபான்களை எதிர்க்கிறோம். தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் எதிர்ப் படையினருக்குஆயுதங்கள் கொடுத்து வருகிறோம். தொடர்ந்து அவர்களுக்கு உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் இருந்ததனது தூதரகத்தைக் கூட அமெரிக்கா பல ஆண்டுகளுக்கு முன் மூடிவிட்டது. இப்போது ஈரானின் ஆதரவுக்காக அமெரிக்காதொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அமெரிக்காவை ஆதரிக்க ஈரான் தயாராக இல்லை.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications