வைகோவை கைது செய்ய வீரமணி எதிர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்து தேவையற்ற அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளவேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணிஎச்சரித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ள வைகோவோ அல்லது மதிமுகவினரோ நாட்டின் ஒற்றுமைக்குப்பாதகம் விளைவிக்கும் வகையில் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.
ஆனால் வைகோ தலைமையிலான மதிமுகவினர் இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள்.வன்முறையில் அவர்களுக்கு நம்பிக்கையும் கிடையாது.
அவ்வாறு ஏதாவது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால் தான் அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கைஎடுக்கலாம்.
அதை விட்டு விட்டு தேவையில்லாமல் பொடா சட்டத்தின் கீழ் வைகோவைக் கைது செய்வது நல்லதல்ல. வெறும்எச்சரிக்கை செய்வதோடு தமிழக அரசு இதை நிறுத்திக் கொள்ளலாம்.
வைகோவைக் கைது செய்தால் தேவையில்லாத அரசியல் சர்ச்சைகள் உருவாகும். அவரைக் கைது செய்தால் அதன்பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டால் அதை வைத்து மத்திய அரசு கடுமையானநடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும். இந்தப் பிரச்சனையில் ஏன் தமிழக அரசு சிக்கிக் கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.
தேவையில்லாத இந்தப் பிரச்சனைக்காகச் செலவழிக்கப்படும் சக்தியை தமிழக மக்களின் நலத் திட்டங்களுக்குச்செலவழிக்கலாம் என்றும் தமிழக அரசுக்கு வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மேற்கொள்ளும் செயல்களை எல்லாம் இதுவரை ஆதரித்துப் பேசி வந்தவீரமணி இவ்விஷயத்தில் முரண்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.க. பிரமுகருக்கு 14 நாள் காவல்:
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாகப் பேசி புதுக்கோட்டையில் நேற்று கைது செய்யப்பட்ட தி.க. பிரமுகரானபாவாணன் இன்று கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணைக்குப் பிறகு இன்று காலை கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்திற்கு பாவாணன் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அந்த நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் சென்று விட்டதால், அவர் சத்தியமங்கலம்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த சத்தியமங்கலம் நீதிபதி பி. சுப்பிரமணியம், பாவாணனை 14 நாள் காவலில் வைக்கஉத்தரவிட்டார். இதையடுத்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் பாவாணன் அடைக்கப்பட்டார்.
முன்னதாக பாவாணன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்குத் தமிழகஅரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications