எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் டூ மறு தேர்வுகள் செப்டம்பர் 30ல் தொடக்கம்
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூ ஆகியவற்றுக்கான மறு தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும்என்று தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு கூறினார்.
சென்னையில் இன்று அவர் கூறியதாவது:
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெற்ற பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகியவற்றுக்குத்தேர்வுகளுக்கு மே-ஜூன் மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்குக் கடந்த ஜூலை மாதம் உடனடி மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த ஒரு ஆண்டை வீணாக்காமல்மேற்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கு வழக்கமாக நடைபெறும்மறு தேர்வுகள் வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்குகின்றன.
பிளஸ் டூவில் தோல்வியடைந்து விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி மொழிப்பாடத் தேர்வும், அக்டோபர் 1ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் நடைபெறும்.
பின்னர் அக்டோபர் 3ம் தேதி இயற்பியல், வரலாறு, அக்கவுண்டன்சி மற்றும் சித்தா தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு அக்டோபர் 11ம் தேதி வரை தொடர்ந்து தேர்வுகள் நடக்கும்.
இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன்மாணவ-மாணவிகளுக்கான மறு தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கும்என்றார் பழனிவேலு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications