தஞ்சாவூரில் சிறுவன் பட்டினியால் சாவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே பட்டினி காரணமாக ஒரு விவசாயியின் 7 வயது மகன் இறந்தான்.
கிடடத்தட்ட 3 நாட்கள் கொலைப் பட்டினி கிடந்துள்ளது அவனது குடும்பம். இதனால் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடும் வெயிலிலில் ரோட்டிலேயே சுருண்டு விழுந்து இறந்தான் அந்தச் சிறுவன்.
ஒரு பக்கம் நெசவாளர்கள் பட்டினியால் வாட, இன்னொரு பக்கம் காவிரிப் படுகை விவசாயிகள் பட்டினிகிடக்கின்றனர். நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் முட்டைப் பிரியாணிவழங்கப்பட்டாலும், காவிரி டெல்டா விவசாயிகளை சீந்துவார் யாருமில்லை.
கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப்பாதிப்படைந்துள்ளனர். போதாக் குறைக்கு கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடாத காரணத்தால்விவசாயிகளால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போனது.
இப்போது கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால் சம்பா நெல் சாகுபடியும் நடக்கவில்லை. இதனால்விவசாயத் தொழில் மட்டுமே தெரிந்த விவசாயிகளுக்கு எந்த வேலையும் இல்லை.
தினக் கூலிகளான இவர்களுக்கு வேலை இல்லாததால் கூலியும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள்அன்றாடம் சாப்பிடுவதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. பலர் கொலைப் பட்டினி கிடக்கின்றனர்.
இவர்களுக்கு மாற்று வேலை தருவதாகக் கூறி தமிழக அரசு சுமார் ரூ. 160 கோடி செலவில் அமலாக்கியுள்ளதிட்டமும் எந்தப் பலனும் தரவில்லை. கண்மாய் வெட்டுவது, ரோடு போடுவது என வேலைகளை இந்தவிவசாயிகளுக்குக் கொடுத்து கொஞ்சம் பணமும், அரிசியும் கூலியாகத் தருகின்றனர்.
ஆனால், இந்த வேலையும் தினமும் கிடைப்பது இல்லை. வாரத்துக்கு ஒரு நாள் தான் அதிகபட்சம் வேலைதரப்படுகிறது. வாரம் ஒரு நாள் கிடைக்கும் சில கிலோ அரிசியும் பணமும் இந்தக் குடும்பங்களின் பட்டினியைமுழுவதுமாகப் போக்க உதவுவதாக இல்லை.
இதனால், பல விவசாயக் குடும்பங்கள் வாரத்தில் பாதி நாள் பட்டினியாகத் தான் இருக்க வேண்டிய நிலைஉருவாகியுள்ளது. நிலத்தில் இறங்கி மாநிலத்துக்கே சோறு போட்ட விவசாயிகள் இன்று பட்டினி கிடக்கும் நிலை.
பசியின் கொடுமைமை பெரியவர்கள் எப்படியோ சமாளித்து விடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோசிறுவர்-சிறுமிகளோ இந்தப் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுருண்டு விழுந்து வருகின்றனர்.
பள்ளிக்குப் போனால் ஒருவேளை சத்துணவாவது கிடைக்கும் என்பதால் குழந்தைகளை பெற்றோர் தவறாமல்பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், பள்ளிக்கு நடந்து செல்ல உடலில் சத்து வேண்டுமே.
தஞ்சாவூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பிரகாஷ் பள்ளிக்குச்சென்று கொண்டிருந்தபோதே வழியில் சுருண்டு விழுந்துள்ளான். அவன் பட்டினியால் தான் சுருண்டுவிட்டான்என்பதை உடனே தெரிந்து கொண்டே அந்த ஊர் மக்கள் அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குஓடியுள்ளனர்.
ஆனால், அவன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.
அவனுக்கு வயது 7 தான். அவனுடன் பிறந்த மற்ற நால்வரும் கூட பசியால் வீட்டில் மயங்கித் தான் கிடக்கின்றனர்.பிரகாஷின் வீட்டில் அனைவரும் மூன்று நாட்களாகக் கொலைப் பட்டினி கிடந்துள்ளது விசாரணையில்தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications