கொளத்தூர் மணியை வெளியே விட்டால் ஆபத்து: சுவாமி எச்சரிக்கை
மதுரை:
கர்நாடக சிறையில் உள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவரான கொளத்தூர் மணிக்கு ஜாமீன் வழங்கிவெளியே அனுப்பினால் நாட்டிற்கே ஆபத்து ஏற்படும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறினார்.
வீரப்பனிடம் தூது அனுப்புவதற்காக கொளத்தூர் மணியை விடுவிக்கும் முயற்சிகளில் கர்நாடக அரசு தீவிரமாகஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் நிருபர்களிடம் சுவாமி பேசுகையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கொளத்தூர் மணிக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகஅவ்வழக்கை விசாரித்து வரும் ஜெயின் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொளத்தூர் மணியை ஜாமீனில் விடுவித்து வெளியே அனுப்பினால் அதைவிட வேறு ஆபத்தேகிடையாது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்க வேண்டுமானால் காட்டுக்குள் கமாண்டோபடைகளை அனுப்பி அதிரடித் தாக்குதலை நடத்த வேண்டும். அவனுடைய மிரட்டல்களுக்கு எந்த அரசும் பணியக்கூடாது.
தமிழகத்தில் சமீப காலத்தில் நக்சல்கள், தீவிரவாதிகள் சிக்கியிருப்பது மாநிலத்தில் தீவிரவாத நடமாட்டம்அதிகமாகியுள்ளதையே காட்டுகிறது.
ஆந்திராவின் மக்கள் போர்க் குழு, நக்சல்கள், வீரப்பன், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பல தீவிரவாதிகளுடன்சேர்ந்து இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைகளில் உள்ள சுமார் 150 பயங்கரவாத முகாம்களை உடனடியாக வெடிகுண்டுவீசித் தகர்த்து எறிய வேண்டும் என்றார் சுவாமி.
-->
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications