""என் பேச்சால் கலவரம் ஏற்பட்டதே இல்லை"": நெடுமாறன் வாக்குமூலம்
திருச்செந்தூர்:
"உள்நாட்டு அமைதியைக் கெடுக்கும் வகையில் நான் பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால்என் பேச்சு காரணமாக எங்கும் எப்போதும் கலவரமோ, மோதலோ வெடித்ததில்லை" என்று தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 1992ல் திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகநெடுமாறன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி பால்துரை முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெடுமாறன் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தைஅளித்தார். அதில்,
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நான் பேசியதாக என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமை உண்மையிலேயே கட்டிக் காக்கப்பட வேண்டுமானால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து இந்தியமாநிலங்களுக்கும் சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காகப் புதிய சட்டமும் கொண்டுவரப்படவேண்டும்.
உள்நாட்டு அமைதியைக் கெடுக்கும் விதத்தில் நான் கூட்டத்தில் பேசியதாகவும் என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.
என்னுடைய பேச்சால் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும், எப்பொழுதும் கலவரமோ, மோதல்களோ ஏற்பட்டதேகிடையாது.
மத்திய, மாநில அரசுகளை குறை கூறி நான் பேசியதாகவும் காவல் துறையினர் என் மீது அபத்தமாகக் குற்றம்சாட்டியுள்ளனர். அரசுகளின் குறைவான செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டுவது ஜனநாயக உரிமை மற்றும்கடமையாகும்.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக நான் தலைமறைவாகியிருந்ததாகவும் போலீசார் பொய்யாகக்குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் காலகட்டங்களில் நான் போலீசாரின் அனுமதியுடனேயே பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நான் அடியோடு மறுக்கிறேன். உடல் ரீதியாகவும்மன ரீதியாகவும் உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழர் தேசிய இயக்கதைஒடுக்குவதற்காகவுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார் நெடுமாறன்.
இதையடுத்து நெடுமாறன் சார்பில் ஆறு சாட்சிகளை விசாரிக்கக் கோரும் மனு நீதிபதி பால்துரையிடம்அளிக்கப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications