என்.ஆர்.ஐ. மருத்துவ "சீட்" கட்டணம் ரூ.50 லட்சம்
சென்னை:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) ஒரு சீட்டின் விலைரூ.50 லட்சம் என தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி ஆண்டுதோறும் 315கூடுதல் இடங்களை ஒதுக்க தமிழக மருத்தவக் கல்வித் துறை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.இந்த 315 இடங்களில் 150 சீட்டுகள் என்.ஆர்.ஐக்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன. சென்னைமருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த சீட்டுகள்ஒதுக்கப்படும்.
இந்த என்.ஆர்.ஐ. கோட்டா சீட்களை பெற விரும்புவோர் ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும்.
முதல் ஆண்டு ரூ.20 லட்சமும், அதற்குப் பின்னர் வரும் மூன்று ஆண்டுகளில் தலா ரூ.10 லட்சம்வீதம் ரூ.30 லட்சம் பணமும் என்.ஆர்.ஐ. மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மாணவர்களின்கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவையும் இந்தக் கட்டணத்தில் அடங்கிவிடும்.
ஒரு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போதே நான்கரைஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கூடுதல் இடங்கள் தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த மூன்று பேர்தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வுகள் முடிந்தபின்னர், வரும் ஜூலை மாதத்திற்குள் கூடுதல் இடங்களுக்கான அனுமதி கிடைத்து விடும் என்றுகூறப்படுகிறது.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் தனியார் கல்லூரி முதலாளிகளே நிரப்பிக் கொள்ளலாம் எனநேற்று தான் தமிழக அரசு அறிவித்தது என்பதும் குறிப்பிடக்கக்கது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுதனியார் கல்லூரி நிர்வாகத்தினருக்கு 20,000 சீட்கள் அதிகம் கிடைக்கும்.
அரசு நுழைவு தேர்வு எழுதி, கவுன்சிலிங்கில் வென்று வரும் மாணவர்களுக்கு இந்த 20,000 இடங்கள் குறையும்.கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு, கவுன்சிலிங் மூலம் வரும் மாணவர்களுக்கு 52,600 இடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் வரும் கல்வி ஆண்டில் இது 33,000 சீட்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்புக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரீ சீட் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நுழைவுத் தேர்வெழுதி சீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகும். கிடைத்தாலும் பீஸ் கட்டுவது அதை விடக்கஷ்டமாகும்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications