வீரப்பனுக்குப் பணம்: கர்நாடக முன்னாள் டிஜிபியிடம் தமிழக போலீஸ் விசாரணை
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க சந்தன கடத்தல் வீரப்பனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து கர்நாடகமாநில முன்னாள் டி.ஜி.பி. தினகரிடம் தமிழக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இவரிடம் தமிழக போலீசார் நடத்தியுள்ள இரண்டாவது விசாரணை இதுவாகும்.
3 ஆண்டுகளுக்கு முன் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்று பணயக் கைதியாக வைத்து இருந்த போது, அவரை மீட்க கோடிக் கணக்கில் பணம் கொடுக்கப் பட்டதாக அப்போது கர்நாடக மாநிலபோலீஸ் டி.ஜி.பி. ஆக இருந்து ஓய்வுபெற்ற தினகர் கூறி இருந்தார்.
வீரப்பன்ஸ் பிரைஸ் கேட்ச்- ராஜ்குமார் என்ற தலைபபில் புத்தகமாகவும் எழுதி வெளியிட்டு பரபரப்பைஏற்படுத்தினார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நக்கீரன் கோபாலைக் கைது செய்யமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இப்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனேவ இந்த போலீசார் தினகரைச்சந்தித்து சில விளக்கங்கள் கேட்டுவிட்டுச் சென்றனர். அப்போது கீழ் நிலை போலீசாரிடம் பேச மாட்டேன். மூத்தபதவியில் உள்ள அதிகாரிகள் வந்தால் தான் வாக்குமூலம் தருவேன் என்று கூறி தமிழக போலீசாரை தினகர்விரட்டிவிட்டார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இந்த நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி நாஞ்சில் குமாரன்தலைமையிலான தனிப்படை போலீஸார் பெங்களூர் வந்து தினகரிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்றும் இந்தவிசாரணை நீடித்ததாகத் தெரிகிறது.
இந்த விசாரணை விவரங்களை தெரிவிக்க தமிழக போலீஸார் மறுத்துவிட்டனர். இது குறித்து தினகரிடம் கேட்டபோது, வாக்குமூலம் கொடுத்தை ஒப்புக் கொண்டார். ஆனால், விவரம் தெரிவிக்க மறுத்தார்.
இந்த நிலையில் தினகருக்கும், மற்றொரு கர்நாடக முன்னாள் டி.ஜி.பி ஜார்ஜுக்கும் இடையே தகராறுஏற்பட்டுள்ளது. ஜார்ஜின் மனைவியோடு தினகருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மனைவியோடுசேர்ந்து தன்னை கொலை செய்ய தினகர் முயல்வதாக இந்திரா நகர் போலீஸில் ஜார்ஜ் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தினகர் கூறுகையில், தமிழ் நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்னிடம் வாக்குமூலம் வாங்கினால்முதல்வர் கிருஷ்ணா உள்பட பலரும் மாட்டுவார்கள், பல உண்மைகள் வெளிவந்துவிடும். இதனால் பயந்துபோய்என்னை ஏதாவது வழக்கில் மாட்டி சிறையில் அடைக்க கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இதற்காகத் தான்ஜார்ஜைத் தூண்டிவிட்டு பொய் புகார் தரச் செய்துள்ளனர் என்றார்.
கர்நாடக முன்னாள் டிஜிபியாக இருந்த தினகர் ஒரு தமிழராவார். செங்கல்பட்டு மாவடத்தைச் சேர்ந்தவர். தனக்குடிஜிபி பதவி தர மறுத்ததற்காக அப்போதைய முதல்வர் ஜே.எச். படேல் மீதே வழக்குப் போட்டவர். வழக்கறிஞரானஇவர் இப்போது இன்னொரு முன்னாள் டிஜிபியின் மனைவியுடன் செக்ஸ் புகாரில் மாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications