பா.ஜ.க. தொழிலதிபரால் நிர்வாண படம் எடுக்கப்பட்ட பெண்: உயிருக்கு பாதுகாப்பு கேட்கிறார்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பா.ஜ.கவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னி கிருஷ்ணனால் கற்பழிக்கப்பட்டு, வீடியோஎடுக்கப்பட்ட அப்பாவிப் பெண்ணான சித்ரா, இந்த வழக்கை மூடி மறைக்க நிறைய பணம் கைமாறி இருப்பதாகக்குற்றம் சாட்டியுள்ளார்.
குடும்பப் பெண்ணான சித்ராவை கோவையைச் சேர்ந்த தொழிலதிபரும் பா.ஜ.க. பிரமுகருமான உன்னி கிருஷ்ணன்ஏமாற்றி அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து மானபங்கப்படுத்தினார். இதற்கு நர்ஸ் ஆலிக்ஸ் என்பவரும்உடந்தையாக இருந்தார்.
இதையடுத்து ஆலிக்சும், உன்னி கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆலிக்ஸ் பலதிடுக்கிடும் தகவல்களைத் தந்தார். கற்பழிக்கப்பட்ட சித்ராவை நிர்வாணமாக வீடியோவில் பதிவு செய்ததையும்,உன்னி கிருஷ்ணன் அவரை அனுபவிப்பதைப் படம் எடுத்ததையும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.
மேலும் அதை ஆபாச சிடிக்களாக மாற்றி, பிரிண்டுகள் போட்டு பலருக்கும் விற்றுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த வழக்கில் இருந்து உன்னியைக் காப்பாற்ற கோவையைச் சேர்ந்த அக்ஷயா ஆறுமுகம் உள்ளிட்ட பா.ஜ.க.பெருந்தலைகள் இறங்கியுள்ளன. போலீசாரின் அதிரடி ஆக்ஷனைக் கண்டு முதல்ல் ஒதுங்கிக் கொண்ட இவர்கள்மீண்டும் இப்போது களத்தில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
உன்னியைக் காப்பாற்ற ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்டு வருவதாகவும் முக்கிய அதிகாரிகளை வளைக்க முயற்சிநடப்பதாகவும் சித்ரா தரப்பில் குற்றம் சாட்டப்பபடுகிறது.
இந் வழக்குத் தொடர்பாக கோவை இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சித்ரா ரகசிய வாக்குமூலம்தந்தார். பின்னர் அவரது கணவரும் வாக்குமூலம் தந்தார்.
இதையடுத்து வெளியே வந்த சித்ரவை நிருபர்கள் சூழ்ந்தனர். அப்போது அழுதுகொண்டே சித்ரா கூறியதாவது:
நடந்த விபரத்தை முழுமையாக அனைவரிடமும் சொல்லி விட்டேன். ஆனால், இதில் இருந்து உன்னிகிருஷ்ணனைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதற்காக ஏராளமான பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
பொய் சாட்சிகளை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது. என்னிடம் பண பலம் இல்லை. உன்னி கிருஷ்ணனுக்கு பணபலமும் அரசியல் பின்னணியும் உள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
எனக்கும் என் கணவருக்கும் கொலை மிரட்டலும் வருகிறது. இதனால் முதல்வரிடம் பாதுகாப்பு கேட்டு மனுகொடுக்க உள்ளேன். எனக்கு நேர்ந்த கொடுமை எந்த அப்பாவிப் பெண்ணுக்கும் நடந்துவிடக் கூடாது என்றார்சித்ரா.
பேசிக் கொண்டே இருந்தவர் அழுதபடியே மயங்கிச் சரிந்தார். இதையடுத்து அவரை உறவினர்களும் போலீசாரும்தாங்கிப் பிடித்தனர்.
பின்னர் போலீஸ் வேனிலேயே அவர் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சித்ரா மனு அனுப்பியுள்ளதாகத்தெரிகிறது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications