வெயிலில் வாடும் தமிழகம்: வட கிழக்குப் பருவ மழை தாமதமாகும்!
மதுரை:
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது காலதாமதமாகலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால்,இதுவரை வட கிழக்குப் பருவ மழை பெய்யவில்லை. மாறாக வெயில் கொளுத்தி வருகிறது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை வெயில் கொளுத்துகிறது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சிநிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை தாமதமாக தொடங்கும். இந்தஆண்டுக்குரிய தென் மேற்கு பருவ மழையும் தாமதமாகவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களே மழை தள்ளிப் போவதற்குக் காரணமாகும். இருப்பினும் தமிழகத்திற்குஇந்த ஆண்டு உரிய மழைப் பொழிவு கிடைக்கும் என்றனர்.
சம்பா சாகுபடிக்கு கல்லணை திறப்பு:
இதற்கிடையே காவிரிப் பாசனத்திற்காக கல்லணை இன்று திறக்கப்பட்டது.
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 7ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திருச்சி கல்லணைக்கு இன்றுஅதிகாலை வந்து சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து கல்லணையும் திறந்துவிடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டஆட்சித் தலைவர்கள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதே போல கொள்ளிடத்தில்இருந்தும் நீர் திறக்கப்பட்டது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்திலிருந்து விநாடிக்கு 500கன அடி நீர்திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து காவிரிப் பாசனப் பகுதிவிவசாயிகள் தங்களது சம்பா சாகுபடிக்கான விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications