இந்திரகுமாரி மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 5 பேர்மீது மேலும் ஒரு ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூலை மாதம்21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று 5 பேருக்கும் சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாகதொடரப்பட்ட வழக்குகளில் இந்திரகுமாரி உட்பட அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலைசெய்யப்பட்டனர்.
இந் நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின்செயலாளராக இருந்த இப்போதைய தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில்இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி குற்றப்பத்திரிக்கையைசி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இவர்கள் ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக ஏற்படுத்திமெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர்.
காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாகபயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர்.
இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்களைஅனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும்என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி எம்.ஜெயபால், இந்த வழக்கு விசாரணைக்காகஇந்திரகுமாரி உட்பட 5 பேரும் ஜூலை மாதம் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications