ஜெவுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 2லட்சம்சுனாமி நிவாரண நிதி அளித்தார்.
ஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வந்த திருமாவளவன் சமீப காலமாக ஜெயலலிதா எதிர்ப்பை குறைத்துக்கொண்டுள்ளார்.
குறை சொல்லக் கூடியதாக இருந்தால் மட்டும் குறை சொல்கிறார், பாராட்டும்படியான காரியங்களை தயங்காமல் பாராட்டுகிறார்.
இந் நிலையில் இன்று காலை தலைமைச் செயலகம் வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனது கட்சியின் சார்பில் ரூ. 2 லட்சம்நிதியை சுனாமி நிவாரணப் பணிகளுக்காக வழங்கினார்.
பின்னர் ஜெயலலிதாவுடன் சிறிது நேரம் தனியே ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சுனாமி நிவாரண நிதிக்கு எங்களது அமைப்பின் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியளிக்கவே வந்தேன். இந்த நிதியில் ரூ.1லட்சம் எங்களது அமைப்பின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் திரட்டப்பட்டது, ரூ. 1 லட்சம் மும்பை மற்றும்குவைத்தில் உள்ள எங்களது அமைப்பினரால் வழங்கப்பட்டது.
சுனாமி நவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளதற்காக முதல்வரைபாராட்டினேன்.
மழலையர் பள்ளி முதல் பள்ளி இறுதி வரை அறிவியல் தமிழ் பாடத்தை அறிமுகப்படுத்தியது, தாழ்த்தப்பட்டவகுப்பு மாணவிகளுக்கு வழங்குவதைப் போல பிற்பட்ட வகுப்பினருக்கும் இலவச சைக்கிள் வழங்கியதுஆகியவற்றையும் பாராட்டினேன்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கக் கூடாது, கோவில்களில் தமிழ் வழிபாடு, நீதிமன்றங்களில் தமிழ்நடைமுறைகள், தொலைக்காட்சிகளில் தமிழ் மரபு உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பது உள்பட தமிழ் பாதுகாப்புஇயக்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முதல்வரைக் கேட்டுக் கொண்டேன்.
அவருடன் அரசியல் பேசவில்லை. எந்த அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என்பது தேர்தல் சமயத்தில்முடிவு செய்யப்படும். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், பாமகவும் ஒரே அணியில்தான் இருக்கும் என்றுராமதாஸ் கூறியுள்ளார். அவர் தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார்.
கூட்டணி ஆட்சி குறித்து இளங்கோவன் பேசியது சரி தான். ஆனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் அவர் தாக்கிப் பேசியதுசரியல்ல.
தமிழகத்தில் எதிர் காலத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்றார்திருமாவளவன்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications