சுனாமி: மீனவர்களுக்கு ஜெ. மேலும் சலுகைகள்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், புதிதாக வாங்கும் வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகுகள், இதரபொருட்கள் மீதான விற்பனை வரியை முழுவதுமாக தள்ளுபடி செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில், அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், சுனாமி தாக்குதலால்தமிழக கடலோர பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
உயிர்கள் மட்டுமல்லாது உடைமைகளையும் இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நிரந்தர மறு வாழ்வு பெற அனைத்துவகையிலும் தமிழக அரசு உதவி வருகிறது.
இதுவரை ரூ. 902 கோடி அளவில் மறு வாழ்வு உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்கள் மீது தனி அக்கறைசெலுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்காக ரூ. 461 கோடி மதிப்புள்ள வாழ்வாதாரதிட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்கள், வள்ளங்கள், இயந்திரப் படகுகள், பிற பொருட்களை புதிதாக வாங்குவதற்குமானியங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முழுமையாக பாதிப்படைந்த கட்டுமரத்திற்குப் பதில்,
ரூ. 32,000 வரம்புக்கு உட்பட்டு, புதிய கட்டுமரங்களை வாங்குவதற்கு மொத்த விலையும் மானியமாக வழங்கப்படுகிறது.அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
புதிதாக வள்ளம் வாங்குவதற்கு, அதற்குரிய தொகையில் 50 சதவீதம் அதாவது ரூ. 75,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
முழுமையாக சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு மாற்றாக, அதற்கான தொகையில் 35 சதவீதம் மானியமாகவழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
பாதியளவு சேதமடைந்த படகுகளை செப்பனிட ரூ. 3 லட்சம் வரை அதாவது 60 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.
புதிய வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகுகளை வாங்குவதற்குரிய முழுத் தொகையையும் மானியமாகவே வழங்க வேண்டும்என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
தற்போது புதிதாக வாங்குவதையும், பழுது பார்ப்பதையும் இலகுவாக்குக்கும் வகையில் முழுமையான விற்பனை வரி விலக்குஉத்தரவிட்டுள்ளேன். வள்ளம், கட்டுமரம், இயந்திரப் படகு, மோட்டார்கள், இதர பொருட்களை வாங்க 12 சதவீதம் விற்பனைவரி விதிக்கப்படுகிறது.
இதை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, கட்டுமரம் செய்வதற்கான மரத்திற்கு 10 சதவீத விற்பனை வரிவிதிக்கப்படுகிறது. இதையும் ரத்து செய்து ஆணையிட்டுள்ளேன். இது நடப்பு நிதியாண்டில் அதாவது 2005-06ம் ஆண்டுமுழுவதும் அமலில் இருக்கும்.
இதன் மூலம் மீன் பிடி கலங்களின் விலை வெகுவாக குறையும். இதேபோல, மத்திய அரசும், கலால் வரி, சேவை வரியிலிருந்துமுழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications