மாணவர்களின் கையை தீயால் சுட்ட ஆசிரியை !!!
சென்னை:
தூத்துக்குடி அருகே ஒரு பள்ளியில் பணத்தை திருடியதாக மாணவர்களின் உள்ளங்கையை, மெழுகுவர்த்தியால் சுட்ட பள்ளிதலைமை ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மகேஷ் குமார் அகர்வால் கூறியதாவது:தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவர் உஷாபார்வதி. இவர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தாவிடம் சென்று, நான் மதிய உணவுக்கு சென்று திரும்பிய நேரத்தில்என்னுடைய கைப்பையில் வைத்திருந்த சம்பள பணத்தில் இருந்து ரூ.200 காணவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட தலைமை ஆசிரியை, உடனே அவருடைய வகுப்புக்கு வந்து மாணவர்களுக்கு பல அறிவுரைகளைவழங்கியுள்ளார். இதை தொடர்ந்து மெழுகுவர்த்தியை கொண்டுவரச் சொல்லி வகுப்பில் இருந்த 35 மாணவர்களையும் அந்தநெருப்பின் மீது உள்ளங்கை வைத்து தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க சொல்லியிருக்கிறார்.
இதில் 6 மாணவர்களின் உள்ளங்கையில் நெருப்பு பலமாக சுட்டுவிட்டது. மீதி மாணவர்கள் சிறிய காயத்துடன் தப்பித்துவிட்டனர்.வீட்டுக்கு சென்ற மாணவர்கள் உள்ளங்கையில் ஏற்பட்ட தீ காயத்தால் அழுது துடித்துள்ளனர். உடனே இந்த சம்பவம் குறித்துகேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடம் முன்பு ஒன்று திரண்டு மாணவர்களை துன்புறுத்திய தலைமைஆசிரியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து மாணவர்களை துன்புறுத்திய குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனரகமும் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடைய ஆசிரியை உஷா பார்வதி காணாமல் போனதாக சொன்ன ரூ.200 பள்ளி கழிப்பறை அருகே கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் அகர்வால்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications