சினிமா வசனகர்த்தா பீட்டர் செல்வகுமார் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல திரைப்பட வசனகர்த்தா பீட்டர் செல்வக்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ரஜினிகாந்த் வடித்த மூன்று முகம், சிவப்புச் சூரியன், தர்மயுத்தம் உள்ளிட்ட பல பிரபலபடங்களுக்கு வசனம் எழுதியவர் பீட்டர் செல்வக்குமார். 66 வயதான இவர்ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.இதுதவிர விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே படத்தை தயாரித்துள்ளார்.தாயம் ஒண்ணு என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீப காலமாக டிவி தொடர்களுக்குவசனம் எழுதி வந்தார்.
பெரும்பாலும் ஏவி.எம். நிறுவனங்களின் தொடர்களுக்கே வசனம் எழுதி வந்தார்.நேற்று மாரடைப்பு ஏற்பட்டு பீட்டர் செல்வக்குமார் மரணமடைந்தார். அவருக்குகிரிதா என்ற மனைவியும், இரு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications