பிபிசி தமிழோசையில் தமிழ் சினிமா குறித்த புதிய தொடர்
லண்டன்:
தமிழ்த் திரையுலகின் வரலாறு குறித்த நெடுந்தொடரை பிபிசி தமிழோசை வானொலி ஒலிபரப்பவுள்ளது.
30 பகுதிகளாக இந்தத் தொடர் வெளியாகும். நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் ஒலிபரப்பாக உள்ள இந்தத் தொடர் தமிழ் சினிமா, திரை நடத்திரங்கள், திரைப்படவியல் வரலாற்று ஆய்வாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் குறித்த சுவையான பக்கங்களை திரும்பிப் பார்க்கவுள்ளது.
வரும் 23ம் தேதி முதல் இதனை பிபிசி தமிழோசை வானொலியிலும், பிபிசி தமிழ் இணையத் தளத்திலும் (http://www.bbctamil.com/) கேட்கலாம்.
முன்னாள் தமிழோசை செய்தியாளரும் பிரபல ஒளி-ஒலி ஊடக நிருபருமான சம்பத் குமார் இது குறித்து கூறுகையில்,
வரும் அக்டோபர் மாதம் தமிழ் திரையுலகம் தனது 75 ஆண்டை கொண்டாட உள்ளது. இத்தனை ஆண்டுகளிலும் பல்வேறு திறமையாளர்களை அது அடையாளம் காட்டியுள்ளது. அவர்கள் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்த நெடிய வரலாற்றில் தமிழ் திரையுலகை வளர்த்த, நிலை நிறுத்திய பழம்பெரும் இயக்குநர்கள், பிரபல தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என திரைத்துறை ஜாம்பவான்களை இந்தத் தொடர் நினைவுகூறும்.
இவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தமிழர்களுக்கு தெரிவிக்கவே இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம் என்றார்.
பிபிசி தமிழோசையின் தலைவர் திருமலை மணிவண்ணன் கூறுகையில், தமிழ் திரையுலக இசை குறித்து 2004-05ம் ஆண்டில் பிபிசி வானொலி ஒளிபரப்பிய தொடர் பெறும் வெற்றி பெற்றது. அதன் மூலம் மாபெரும் தமிழ்த் திரையுலகம் குறித்த தகவல்களுக்கு மக்களிடையே உள்ள ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ளோம்.
இந்த இனிய தொடரை கேட்டு மகிழ நேயர்களை அன்புடன் அழைக்கிறேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications