வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்க ஜெ. கோரிக்கை
சென்னை:
கோவையில் விபத்துக்குள்ளான குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளும் திமுக அரசின் அலட்சியப் போக்கால், கோவை, உக்கடம் பகுதியில் இருக்கும் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகள் அடியோடு இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த செய்தி என்னுடைய நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குடிசை மாற்று வாரியக் கட்டடங்கள் சரியான முறையில் பராமரிப்பின்றி இருந்துள்ளது. குறிப்பாக ஏஏ பிளாக்கில் மட்டும் 32 வீடுகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது. அவ்வப்போது இந்த வீட்டு கட்டடங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்திருக்கிறது.
வீடு சேதமடைந்து வருவதை அங்கு வசிக்கும் பொதுமக்கள் பலமுறை திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இந்த குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களின் நிலைமையை அறிந்து கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்படி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு மாற்று வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்குடன் இருந்ததன் விளைவாக இன்று அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் இருக்கிறார்கள்.
இதற்கான முழுப் பொறுப்பையும் திமுக அரசே ஏற்க வேண்டும். உயிரிழந்த 13 பேர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அங்கு குடியிருந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடு வழங்குவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications