காட்டுமிராண்டிக் காலத்திற்கு அழைத்துச் செல்லும் ராமதாஸ் - ஆற்காடு வீராசாமி கடும் தாக்கு

சென்னை: மின் உற்பத்தி செய்யக் கூடாது, துணை நகரங்கள் கூடாது, விமான நிலைய விரிவாக்கம் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்கக் கூடாது, புதிய தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று பேசி வரும் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காட்டுமிராண்டிக் காலத்தைப் போல மாற வேண்டும் என நினைக்கிறார் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கடுமையாக சாடியுள்ளார்.
சில காலமாக ஓய்ந்திருந்த திமுக - பாமக மோதல் மீண்டும் வலுப் பெற்றுள்ளது. மருத்துவ மாணவர் ஸ்டிரைக் தொடர்பாக இரு கட்சிகளும் கடுமையாக அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி கொடுத்தபடியும் இருந்தன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மின் நிலையம் தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் மூண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள தனியாருக்குச் சொந்தமான கடலூர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தை அமைக்கவுள்ள நபர் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உறவினர். இதனால்தான் அப்பகுதி மக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக டாக்டர் ராமதாஸ் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு ஆற்காடு வீராசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் பவர் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ஜெயலலிதா ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், மின் உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. அந்த நிறுவனம் தியாகவள்ளி, குடிகாடு கிராமங்களில் அனல் மின் நிலையம் அமைக்க உள்ளது. இந்த கடற்கரையோர கிராமங்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் கூட யாரும் நெல் உற்பத்தி செய்யவில்லை.
திட்டம் அமையவுள்ள இடம் விளை நிலம் அல்ல, விளைச்சலுக்கு ஏற்ற நிலமும் அல்ல. அனைத்துமே தரிசு நிலங்கள்தான்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு சொந்தம் என்று ராமதாஸ் பேசியுள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள உறவு பற்றி பாமக எம்.எல்.ஏ வேல்முருகனிடம் கேட்டால், ராமதாசுக்கு உண்மை புரியும்.
மின் உற்பத்தி செய்யக் கூடாது, துணை நகரங்கள் கூடாது, விமான நிலைய விரிவாக்கம் கூடாது, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அனுமதிக்கக் கூடாது, புதிய தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என்று பேசிவரும் ராமதாஸ், தமிழ்நாடு காட்டுமிராண்டிக் காலத்தைப் போல
மாற வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் ராமதாஸ் மட்டும் அறக்கட்டளை நிறுவி, ஏரிக்கரையின் கீழ் உள்ள 250 ஏக்கர் விளைநிலங்களில் கல்லூரியை கட்டலாம்.
கருணாநிதியின் சாதனைகளை தடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களுக்கு திமுக மீது ஆத்திரமும், கோபமும் ஏற்படவேண்டும் என்பது ராமதாசின் ஆசை. ஆனால் அவரின் ஆசைக்கு யாரும் பலியாக மாட்டார்கள் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications