பழனியில் இன்று பங்குனி உத்திர தேரோட்டம்
பழனி: பழனி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடக்கிறது. கன மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் 3ம் படை வீடான பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி மற்றும் மலைகோவிலில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதைத் தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடந்தது.
இந் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேராட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி பழனி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், ஆறுகால பூஜைகள் நடந்தன.
பின்னர் தீர்த்தவாரி எழுந்தருளலும், தங்கப் பல்லக்கு உலா ஆகியவையும் நடந்தன. மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளைக் காணவும் முருகப் பெருமானை தரிசிக்கவும் கன மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
தீர்த்தக் காவடி எடுத்து வந்துள்ள பக்தர்களும் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்று நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி பழனி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications