ஜெவுக்கு எதிரான வழக்கை தினந்தோறும் நடத்த உத்தரவு
சென்னை: வருமான வரி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் கூறியுள்ள உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேகமாக முடிக்கும் வகையில் தினந்தோறும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1993-94ம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கை காட்டவில்லை. இது குறித்து வருமானவரித் துறை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ல் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி தள்ளுபடி செய்தது. 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் சாட்சி விசாரணையை சமீபத்தில் எழும்பூர் நீதிமன்றம் ஆரம்பித்தது.
இதையடுத்து தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்தார். 1993-94ம் ஆண்டில் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை எழும்பூர் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் அவர் அளித்த தீர்ப்பில்,
வரி கட்டவில்லை என்று 1997ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 6.2.2001ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு தேதி குறித்து, 8 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. அந்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் வருமானவரி துறை அதிகாரியை சாட்சியாக எழும்பூர் நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. சாட்சி விசாரணையை தொடங்கி விட்டால், அதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 309ம் பிரிவு கூறுகிறது.
ஆகவே சாட்சி விசாரணையை தனித்தனியாக பிரித்து விசாரிக்க முடியாது. மேலும், இந்த வழக்கில் தினந்தோறும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரிகிறது.
இதனால் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் மனுவுக்கு வருமானவரித் துறை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications