டிஎன்பிஎஸ்சி தேர்வு: ஊனமுற்றோருக்கு கட்டண விலக்கு
சென்னை:டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் ஊனமுற்றோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்களித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் தேவையான பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஊனமுற்றவர்களின் நலன்களை மேம்படுத்திடவும், அவர்களின் மதிப்பைச் சமுதாயத்தில் உயர்த்திடவும், ஒரு புதிய சலுகையை அரசு அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஊனமுற்றவர்களுக்கு இனித் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினரராக, மனித வளம் மற்றும்... துறை கூடுதல் ஆணையர் கே.கே.ராஜாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications