புத்தாண்டுக்குப் பின் கச்சா எண்ணெய் மேலும் குறையும்!
லண்டன்: புத்தாண்டில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை மேலும் குறையக்கூடும் என்பதே அந்தச் செய்தி.
இப்போது 38 டாலராக உள்ள கச்சா எண்ணெயின் விலை வரும் ஜனவரியில் மேலும் குறைந்து 33 டாலருக்கும் கீழே போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை நிலைப்படுவது அவ்வளவு சுலபத்தில் நிகழாது. இரண்டாவது காலாண்டின் இறுதியில் வேண்டுமானால் ஓரளவு நிலைப்படும் என லண்டனைச் சேர்ந்த பங்குவர்த்தக நிபுணர் நிமித் காமர் கூறியுள்ளார்.
அதேநேரம் இதே நிலை நீடித்து கச்சா எண்ணெய் 30 டாலருக்கும் கீழே சரிந்தால், உலகப் பொருளாதாரம் பின்னடைவை நோக்கித் திரும்பும். அதாவது பணமந்த சூழல் (Deflation) வந்துவிடும். எனவே ஏதாவது ஒரு விலையில் கச்சா எண்ணெய் நிலைப்படுத்தப்ட வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு துவக்கத்தில் 100 டாலராக இருந்தது ஒரு பேரல் கச்சா எண்ணெய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டின் மத்தியில் அதுவே 148 டாலர் வரை உயர்ந்தது. இந்தியாவில் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இதுவே காரணமாகக் காட்டப்பட்டது.
இப்போது கச்சா எண்ணெய் விலையும் சரிந்து, இந்தியா கொள்முதல் செய்யும் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
ஆனாலும் இந்தியாவில் ஏறிய விலை இறங்குவதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications