நில மோசடி- நெல்லை மாவட்டம் முதலிடம்
நெல்லை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் 160 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நில மோசடி தொடர்பான வழக்குகளில் நெல்லை மாவட்டம்தான் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக அளவாக 160 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
100 வழக்குகள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. 19 வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. வழக்குகளில் சம்பந்தப்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1500 ஏக்கர் நிலங்கள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான், நாங்குநேரி, ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ளது.
நான்கு வழி சாலை, காற்றாலை, அணுமின் நிலையம் போன்றவை உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலங்களில் மதிப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலைக்கு விற்பனை செய்த நிலத்தின் உரிமையாளர்கள் தற்போது விலை உயர்ந்துள்ளதால் தங்கள் நிலத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாக கூறி கிரயம் வாங்கியவர்கள் மீது விற்பனை செய்தவர்கள் பெய்யான மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மனு கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நில மோசடியில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications