நில மோசடி- நெல்லை மாவட்டம் முதலிடம்
நெல்லை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் 160 நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நில மோசடி தொடர்பான வழக்குகளில் நெல்லை மாவட்டம்தான் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்திலேயே அதிக அளவாக 160 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
100 வழக்குகள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. 19 வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. வழக்குகளில் சம்பந்தப்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1500 ஏக்கர் நிலங்கள் மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான், நாங்குநேரி, ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ளது.
நான்கு வழி சாலை, காற்றாலை, அணுமின் நிலையம் போன்றவை உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலங்களில் மதிப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலைக்கு விற்பனை செய்த நிலத்தின் உரிமையாளர்கள் தற்போது விலை உயர்ந்துள்ளதால் தங்கள் நிலத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாக கூறி கிரயம் வாங்கியவர்கள் மீது விற்பனை செய்தவர்கள் பெய்யான மனுவை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மனு கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நில மோசடியில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் வாங்குபவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications