Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!

Subscribe to Oneindia Tamil

Swien flu: TN schools adviced to be on alert
சென்னை: பன்றிக் காய்ச்சல் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், பன்றிக் காய்ச்சல் குறித்த செய்திகளை தங்களது மாணவ, மாணவியரிடம் எடுத்துக் கூறி வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறப்படுகிறது.

மாணவ, மாணவியருக்கும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பரிசோதனைகள் நடத்தும்படியும் பல்வேறு பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியோர் அல்லது அடிக்கடி வெளிநாடு செல்லும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரைக் கொண்டுள்ள மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்து பரிசோதனைகளைச் செய்ய சில பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளனவாம்.

இதுகுறித்து சூளைமேட்டில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வசந்தா பாலசுப்ரமணியன் கூறுகையில் நோய் பாதிப்பு குறித்து நாங்கள் தினசரி காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு விளக்கி வருகிறோம்.

நோய் வேகமாக பரவி வருவதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து விளக்கிக் கூறி, அதுபோன்று ஏதாவது தென்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் கூறி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

இவை தவிர பள்ளிகளில் அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

குழந்தைகளை அதிகம் தாக்கும் ஸ்வைன்...

இதற்கிடையே, 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைத்தான் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக தாக்கி வருவதாக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 10 முதல் 39 வயது வரையிலானவர்களையே பெரும்பாலும் பன்றிக் காய்ச்சல் அதிகம் தாக்கியுள்ளது.

இதுவரை நோய் தாக்கியவர்களில் 558 பேரில் 350 பேர் இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 179 பேர். 20 முதல் 29 வயது வரையிலானவர்கள் 96 பேர்.

மேலும் பன்றிக் காய்ச்சல் தாக்கியவர்களில் 48 சதவீதம் பேர் பள்ளிக்கூட சிறார்கள் ஆவர். அதாவது பள்ளிச் சிறார்கள் 245 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 29 வயதுகுட்பட்டவர்கள் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை, அதிக அளவில் (62 பேர்) பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

அதிக அளவில் இளைஞர்கள், இளம் பெண்கள் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட முக்கிய காரணம், அவர்கள்தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதால்.

தொடர்பான செய்திகள்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+