ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!

இதையடுத்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், பன்றிக் காய்ச்சல் குறித்த செய்திகளை தங்களது மாணவ, மாணவியரிடம் எடுத்துக் கூறி வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பரிசோதனைகள் நடத்தும்படியும் பல்வேறு பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியோர் அல்லது அடிக்கடி வெளிநாடு செல்லும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரைக் கொண்டுள்ள மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்து பரிசோதனைகளைச் செய்ய சில பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளனவாம்.
இதுகுறித்து சூளைமேட்டில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வசந்தா பாலசுப்ரமணியன் கூறுகையில் நோய் பாதிப்பு குறித்து நாங்கள் தினசரி காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு விளக்கி வருகிறோம்.
நோய் வேகமாக பரவி வருவதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து விளக்கிக் கூறி, அதுபோன்று ஏதாவது தென்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் கூறி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவை தவிர பள்ளிகளில் அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
குழந்தைகளை அதிகம் தாக்கும் ஸ்வைன்...
இதற்கிடையே, 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைத்தான் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக தாக்கி வருவதாக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 10 முதல் 39 வயது வரையிலானவர்களையே பெரும்பாலும் பன்றிக் காய்ச்சல் அதிகம் தாக்கியுள்ளது.
இதுவரை நோய் தாக்கியவர்களில் 558 பேரில் 350 பேர் இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 179 பேர். 20 முதல் 29 வயது வரையிலானவர்கள் 96 பேர்.
மேலும் பன்றிக் காய்ச்சல் தாக்கியவர்களில் 48 சதவீதம் பேர் பள்ளிக்கூட சிறார்கள் ஆவர். அதாவது பள்ளிச் சிறார்கள் 245 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 29 வயதுகுட்பட்டவர்கள் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை, அதிக அளவில் (62 பேர்) பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
அதிக அளவில் இளைஞர்கள், இளம் பெண்கள் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட முக்கிய காரணம், அவர்கள்தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதால்.
தொடர்பான செய்திகள்:
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications