ஸ்வைன்: உஷார் நிலையில் தமிழக பள்ளிகள்!

இதையடுத்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும், பன்றிக் காய்ச்சல் குறித்த செய்திகளை தங்களது மாணவ, மாணவியரிடம் எடுத்துக் கூறி வருகின்றன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கும், ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பரிசோதனைகள் நடத்தும்படியும் பல்வேறு பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியோர் அல்லது அடிக்கடி வெளிநாடு செல்லும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரைக் கொண்டுள்ள மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுத்து பரிசோதனைகளைச் செய்ய சில பள்ளிகள் நடவடிக்கை எடுத்துள்ளனவாம்.
இதுகுறித்து சூளைமேட்டில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வசந்தா பாலசுப்ரமணியன் கூறுகையில் நோய் பாதிப்பு குறித்து நாங்கள் தினசரி காலை நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தின்போது மாணவர்களுக்கு விளக்கி வருகிறோம்.
நோய் வேகமாக பரவி வருவதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளோம்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து விளக்கிக் கூறி, அதுபோன்று ஏதாவது தென்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது ஆசிரியர்களிடம் கூறி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவை தவிர பள்ளிகளில் அவசரத் தேவைக்காக மருத்துவர் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
குழந்தைகளை அதிகம் தாக்கும் ஸ்வைன்...
இதற்கிடையே, 10 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளைத்தான் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக தாக்கி வருவதாக சுகாதாரத் துறை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 10 முதல் 39 வயது வரையிலானவர்களையே பெரும்பாலும் பன்றிக் காய்ச்சல் அதிகம் தாக்கியுள்ளது.
இதுவரை நோய் தாக்கியவர்களில் 558 பேரில் 350 பேர் இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 179 பேர். 20 முதல் 29 வயது வரையிலானவர்கள் 96 பேர்.
மேலும் பன்றிக் காய்ச்சல் தாக்கியவர்களில் 48 சதவீதம் பேர் பள்ளிக்கூட சிறார்கள் ஆவர். அதாவது பள்ளிச் சிறார்கள் 245 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களைப் பொறுத்தவரை 20 முதல் 29 வயதுகுட்பட்டவர்கள் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை, அதிக அளவில் (62 பேர்) பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
அதிக அளவில் இளைஞர்கள், இளம் பெண்கள் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட முக்கிய காரணம், அவர்கள்தான் அதிக அளவில் பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதால்.
தொடர்பான செய்திகள்:
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications