கன மழை- திரும்பி வந்த விமானம்- பயணிகள் ரகளை
சென்னை: மோசமான வானிலை காரணமாக அந்தமான் சென்ற கிங்பிஷர் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் போர்ட்பிளேர் சென்றதால், கிங்பிஷர் பயணிகள் ரகளை செய்தனர்.
இன்று காலை 4.50 மணிக்கு 162 பயணிகளுடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கிங்பிஷர் விமானம் ஒன்று சென்னையிலிருந்து கிளம்பியது.
விமானம் அந்தமானை நெருங்கியபோது கன மழையும், இடியுமாக இருந்ததால் விமானத்தால் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து 6.35 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கேத் திரும்பியது. அதன் பின்னர் ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மீண்டும் கிளம்பக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தமானில் நிலைமை சரியில்லை என்று தகவல் வந்ததால், விமானம் 7.45 மணிக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸ் போனதால் ரகளை...
இந்த நிலையில், காலை 9.30 மணிக்கு 93 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் போர்ட் பிளேர் கிளம்பிச் சென்றது.
இதைப் பார்த்த கிங்பிஷர் பயணிகள், இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும் போகிறதே, எங்களையும் அந்தமானுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விமான நிலைய அதிகாரிகளும், கிங்பிஷர் நிறுவன அதிகாரிகளும் அமைதிப்படுத்தினர். போர்ட்பிளேரில் ஒரு நேரத்தில் ஒரு விமானம்தான் இறங்க முடியும், கிளம்ப முடியும். எனவே இனிமேல் அங்கு செல்ல முடியாது. நாளை உங்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினர்.
இந்த விளக்கத்தை ஏற்ற பயணிகள் அமைதி அடைந்தனர். இந்த அமளியில் நடராஜன் என்ற பயணி மயக்கமடைந்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
சரியாக சாப்பிடாத காரணத்தால்தான் மயக்கம் வந்து விட்டதாக பின்னர் நடராஜன் கூறியதால் அமைதி திரும்பியது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications