ஜார்க்கண்ட் - காங்கிரஸை பிடித்து தொங்கும் லாலு

கடந்த 2005ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது.
அங்கு தேர்தல் முன்னதாக நடத்தப்பட வேண்டும் பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இம்முறை தனித்து போட்டியிடும் வாய்ப்பு அதிகமருப்பதாக சிபு சோரன் தெரிவித்தார். இதன்மூலம் அவர் காங்கிரஸூடனான கூட்டணிக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொண்டு ஜார்க்கண்டில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்ள ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முடிவு செய்துள்ளார்.
அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது கட்சி தலைவர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடைய கட்சி தலைவர்கள் காங்கிரஸூடன் கூட்டணி வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின் லாலு கூறுகையில்,
சோனியா காந்திக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் காங்கிரஸும், நாங்களும் ஒரே பாதையில் தான் செல்கிறோம். நான் காங்கிரஸை விட்டு எப்போதும் விலகமாட்டேன்.
மதவாத சக்திகளை அழிக்க பீகாரிலும், ஜார்க்கண்டிலும் மதசார்பற்ற கட்சிகள் திரண்டு போட்டியிடும். இது தொடர்பாக சோனியாவிடம் பேசினேன். விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
ஆனால், காங்கிரஸோ அவரை சுத்தமாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் மட்டுமே தந்து வெறுப்பேற்றிய லாலுவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸார் கூறி வருவதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications