பாசிச ஆட்சி நடத்தும் திமுக சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது-வைகோ

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை தி.மு.க அரசால் ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசுக்குக் கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி அதற்கு மாறாக, தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வை இலங்கை அரசு தந்துவிட்டது என்று சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கினார்.
நெஞ்சை நடுங்க வைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 வீரத்தமிழர்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்யக் காரணமாயிற்று. அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுவதைத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி உள்ளார்.
ஈழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆயுதங்களைத்தந்த இந்திய அரசு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆகும். அங்கே தமிழர்களைக் கொன்றால் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களின் கோபம் திரும்பும் என்று சீமான் பேசியது குற்றமாகாது.
சென்னையிலே ஒரு தலித் இளைஞனைச் சுட்டுக்கொன்ற கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா பிரதமரோடு கரம் குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத்தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி பாதுகாப்புச் சட்டத்தை வீசுகிறார். கடந்த ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் வீரத் தியாகிகள் தீக்குளித்தபோது, அதனைக் கொச்சைப்படுத்தி குடும்பச் சண்டையால் தீக்குளித்தனர் என்று காவல்துறையை அறிக்கைவிடச் செய்தவர்தான் தமிழக முதல்வர்.
ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க முனையாமல் அதற்குக் காரணமான இந்திய அரசுக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகி என்ற குற்றச்சாட்டில் இருந்து தமிழக முதல்வர் விடுபடவே முடியாது. அவர் தற்போது எடுத்து வருகிற இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அந்தக் குற்றச்சாட்டை மேலும் கூர்மைப்படுத்தவே செய்கின்றன.
சர்வாதிகாரப் போக்கில் பாசிச ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
'இலங்கை தூதரகம் இருக்கவே கூடாது'
முன்னதாக இந்தியாவில் இலங்கை தூதரகம் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கடலூர் சிறையிலிருந்து இன்று காலை விடுவிக்கப்பட்ட வைகோ கூறினார்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த படு பாதகச் செயலைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் இலங்கை துணைத் தூதரகத்தை மூ்டக் கோரி ஊர்வலமாக கிளம்பினர்.
இதையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 160 பேரை போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இதை விசாரித்த கோர்ட் அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நேற்று இரவுக்குள் சிறைக்குப் போகவில்லை. இதையடுத்து இன்று காலையில் உத்தரவு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 160 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையாகி வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், அடித்தே கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த செயலுக்கு இந்திய அரசும் உடந்தையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட கொலை பாதக செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் தூதரகம் இந்தியாவில் இருக்கக்க கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றியே ஆக வேண்டும். இலங்கை தூதரகத்தை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் வைகோ.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications