For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோபி நகராட்சித் தலைவியை முற்றுகையிட்டு திமுக, காங். கவுன்சிலர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

கோபிச்செட்டிப்பாளையம்: கோபி நகராட்சித் தலைவி ரேவதி தேவியை முற்றுகையிட்டு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி நகராட்சித் தலைவியாக இருப்பவர் ரேவதி தேவி. அதிமுகவைச் சேர்ந்தவர். இன்று காலை நகராட்சிக் கூட்டம் கூடியது. அப்போது திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் நகராட்சித் தலைவியை முற்றுகையிட்டனர்.

அதிமுக கவுன்சிலர்களின் வார்டுளுக்கு மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை நகராட்சித் தலைவர் ஒதுக்கீடு செய்கிறார். மற்ற கட்சிகளின் வார்டுகளுக்கு எதுவும் செய்வதில்லை. பாரபட்சமாக நடக்கிறார் என்று கூறி முற்றுகையிட்டபடி கோஷம் போட்டனர்.

நகராட்சித் தலைவியை திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவல் எதுவும் நடத்த முடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X