சிஆர்பிஎப் தலைவராக வீரப்பன் புகழ் டிஜிபி விஜயக்குமார் நியமனம்

சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழக அதிரடிப்படைக்குத் தலைவராக இருந்தவர் விஜயக்குமார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தியப் பணிக்கு மாறுதலாகிச் சென்றார். ஹைதராபாத் போலீஸ் அகாடமியின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜயக்குமாரை சிஆர்பிஎப் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது.
மாவோயிஸ்ட் வேட்டையை சரிவர கையாளத் தெரியவில்லை என்று தற்போது சிஆர்பிஎப் தலைவர் விக்ரம் ஸ்ரீவத்சவா பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தார். இதையடுத்து நேற்று அவரை அதிரடியாக மாற்றிய மத்திய அரசு அந்த இடத்திற்கு விஜயக்குமாரை கொண்டு வந்துள்ளது.
இந்த மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வன போர் முறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர் விஜயக்குமார். இவரது வனப் போர் உத்திகள்தான் வீரப்பனின் கொட்டத்தை அடக்க உதவியாக இருந்தது. வீரப்பனையும், அவனது கும்பலையும் வேரோடு ஒடுக்கியவர் விஜயக்குமார்.
மாவோயிஸ்டுகளும் தற்போது வனப் போர் முறைகளைத்தான் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். எனவே விஜயக்குமார் சிஆர்பிஎப் தலைவராகியுள்ளதன் மூலம் மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிரான சிஆர்பிஎப்பின் உத்திகளில் பெரும் மாற்றம் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு விஜயக்குமார் எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜியாக காஷ்மீரில் பணியாற்றியபோது நல்ல பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளின் ஊடுறுவலைத் தடுக்கும் முயற்சியில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றிருந்தார். எனவே விஜயக்குமாரின் வருகை சிஆர்பிஎப்புக்கு புது பலம் கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான், விஜயக்குமாரை தனிப்பட்ட்ட முறையில் சிஆர்பிஎப் தலைவர் பதவிக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட் பிரச்சினை மட்டுமல்லாமல் காஷ்மீர் கலவரத்தைக் கையாண்ட விதத்திலும் ஸ்ரீவத்சவா மீது பெரும் அதிருப்தி நிலவியது. கண்மூடித்தனமாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்ததால்தான் அங்கு பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. இதையடுத்தே ஸ்ரீவத்சவாவை மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
மேலும் காஷ்மீரில் விஜயக்குமார் பணியாற்றியபோது அங்கு அவருக்கு நல்ல பெயர் இருந்தது. எனவேதான் விஜயக்குமாரை சிஆர்பிஎப்புக்குக் கொண்டு வந்ததன் மூலம் காஷ்மீரிலும், மாவோயிட்ஸ் வன்முறைக்கு எதிரான போரிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய அரசு கருதியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications