பணியில் தூங்கி விழுந்த போலீசாருக்கு டிரான்ஸ்பர்: எஸ்பி அதிரடி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இரவு ரோந்துக்கு செல்லாமல் தூங்கிய 5 போலீஸ் அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி விஜேயந்திர பிதாரி உத்தரவிட்டார். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை எஸ்பியாக பொறுப்பேற்ற விஜேயந்திர பிதாரி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். தினமும் ஓரிரு காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது அவர் காவலர்கள் பணியில் ஒழுங்காக இருக்கிறார்களா, அவர்கள் ஷூ, பேட்ஜ், யூனிபார்ம் எல்லாம் சரியாக அணிந்துள்ளார்களா, அங்குள்ள ஆவணங்கள் எல்லாம் சரியாக பராமரிக்கப்படுகிறதா, பொது மக்கள் புகார் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்குநேரி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு பேட்ஜ் அணியவில்லை என்று ஏட்டு ராஜா என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதே போல் ஏர்வாடி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு என்ற காவலர் ஷூ அணியவில்லை என்பதற்காக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையி்ல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி விஜேயந்திர பிதாரி பணியிலிருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஒரு சில அதிகாரிகளைத் மைக்ரோபோனில் தொடர்பு கொண்டார்.
எஸ்பி தொடர்பு கொண்டபோது அவர்கள் பணியில் தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து தாழையுத்து டிஎஸ்பி தியாகராஜன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், ஆலங்குளம், புளியங்குடி பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications