ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட 3 அமைச்சர்களின் தொகுதிகளை தாரைவார்த்த திமுக
சென்னை: தற்போதைய திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 3 அமைச்சர்களின் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி உறுப்பினராக உள்ள சென்னை, அண்ணாநகர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆலந்தூர், அமைச்சர் செல்வராஜின் முசிறி ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது திமுக.
ஆற்காடு வீராசாமியின் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளதால் அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படுமா அல்லது கல்தா தரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரம் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஆலந்தூரைப் பிரித்துத்தான் பல்லாவரம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முசிறியை இழந்துள்ள செல்வராஜுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்ச்சநல்லூர் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மட்டுமே கிடைத்தது. இப்போது அந்தத் தொகுதியை திமுக தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. அங்கு திமுக சார்பில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்து சேர்ந்த பி.கே.சேகர்பாபுவை திமுக நிறுத்தும் என்று தெரிகிறது.
அதேசமயம், காங்கிரஸுக்கு இந்த முறை 5 தொகுதிகளை சென்னையில் கொடுத்துள்ளது திமுக.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications