ஜெயிக்க முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை-புதிய நீதிக் கட்சி
சென்னை: தங்களால் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று புதிய நீதிக் கட்சி பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
தனித்துப் போட்டியிட்டால் தாங்கள் மட்டுமல்ல எந்தக் கட்சியுமே வெற்றி பெற முடியாது என்பதால் அதை உணர்ந்து தாங்கள் போட்டியிடவில்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளது அக்கட்சி.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி, கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுவதென்று தீர்மானித்தது. அனைத்து முதலியார்கள் (செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர், பிள்ளைமார், சேனைத்தலைவர்) சுமார் 2 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கிற புதிய நீதிக்கட்சிக்கு, தி.மு.க. கூட்டணியிலும், அ.தி.மு.க. கூட்டணியிலும் இணைந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
ஆனால், இந்த இரண்டு கூட்டணியிலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, நாடார் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, முக்குலத்தோர் சமுதாயத்தினர் நடத்தும் கட்சி, முஸ்லீம் சமுதாயத்தினர் நடத்தும் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
வன்னியர் சமுதாயத்தலைவர் நடத்துகிற பாட்டாளி மக்கள் கட்சிக்கு கூட்டணியில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலியார் சமுதாய கட்சி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு உள்ள சூழ்நிலையில், தனித்து போட்டியிட்டு எந்தவொரு கட்சியும் வெற்றிபெற முடியாது என்கிற நிலையில், புதிய நீதிக்கட்சி இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கிற சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெறுவது எளியதல்ல என்பதால், இரு கழக கூட்டணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வெற்றிக் கனியை ஈட்டவும், ஆட்சியை பிடிக்கவும் இரு கழக கூட்டணித் தலைவர்கள் எண்ணற்ற சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
அனைத்து முதலியார், வேளாளர், செங்குந்தர் மற்றும் சேனைத்தலைவர் ஆகிய பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திட வேண்டும். அல்லது கல்வி, வேலைவாய்ப்பில் மேற்கண்ட பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று எந்த கூட்டணி அறிவிக்கிறதோ, அந்த கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள புதிய நீதிக்கட்சி அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப்பேரவை நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் முதலியார் சமுதாய மக்களும் அயராது பணியாற்றி வெற்றிக்கனியை ஈட்டி தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications